மட்டன் வாங்கி மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் சமைத்து சாப்பிடுவோம். அசைவம் சாப்பிடுபவர்களுக்கு ஆட்டிறைச்சியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் மிகவும் பிடித்தமானவை.ஆனால் மட்டன் கறியை விட அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்பு உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
இவ்வளவு நன்மையுள்ள ஆட்டு மண்ணீரல் அதாவது சுவரொட்டி வைத்து செட்டிநாடு சுவையில் மசால் செய்முறையை தான் பார்க்கப்போகிறோம். மட்டன் சுவரொட்டி மசால் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் மண்ணீரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும்.
செட்டிநாடு சுவரொட்டி மசால் எளிதான மற்றும் சுவையான ரெசிபி. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் மண்ணீரலில் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. செட்டிநாடு சுவரொட்டி மசால் இது மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செட்டிநாடு சுவரொட்டி மசால் | Chettinadu Spleen Masala Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ சுவரொட்டி கறி
- 5 பச்சை மிளகாய்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
அரைக்க
- 1 துண்டு தேங்காய்
- 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
செய்முறை
- முதலில் அனைத்து பொருளையும் தயாராக எடுத்து கொள்ளவும்
- கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின்னர் அதனுடன் அரைத கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம். சூடான செட்டிநாடு சுவரொட்டி மசால் தயார்.