புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.
புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. அதில் நாம் இங்கு பார்க்க இருப்பது தேங்காய் பால் புலாவ். தேங்காய்ப்பால் புலாவ் மிகவும் சுவையான மதிய உணவு வகை. இது டிபன் பாக்ஸ்கும் ஏற்ற உணவாகும், விரைவில் செய்யக்கூடியது, காய்கறிகள் மற்றும் தேங்காய் பால் சேர்ப்பதால் வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தேங்காய்ப்பால் வெஜிடபிள் புலாவ் பாசுமதி அரிசி, தேங்காய் பால், விருப்பமான காய்கறிகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு கிளாஸ் புதிய தேங்காய் பால் குடிப்பது உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது, குறிப்பாக கோடை காலங்களில். சாதாரணமாக புலாவ் செய்வது மிகவும் எளிது. அதிலும் இது காலை வேளையில் பள்ளிக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செய்து எடுத்துச் செல்ல ஈஸியான ஒரு ரெசிபி. தேங்காய் பால் புலாவை எளிதாகவும் சுவையாகவும் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேங்காய்ப்பால் புலாவ் | coconut milk pulao recipe in tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 டம்ளர் பாசுமதி அரிசி
- 1 1/2 டம்ளர் தேங்காய்ப்பால்
- 4 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 பிரியாணி இலை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 டீஸ்பூன் நெய்
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கப் புதினா, கொத்தமல்லி
செய்முறை
- முதலில் அரிசியை நன்கு அலசி தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
- பிறகு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், புதினாவை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- இவை நன்கு வதங்கியதும் அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து குக்கரில் சேர்த்து கலந்து விட்டு தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஊற்றி குக்கரை மூடி விடவும்.
- குக்கரில் 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் புலாவ் தயார்.