உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து கொடுத்தால் குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். பயிர் வகைகளை வைத்து ஒரு கலவை சாதம் போல செய்து கொடுத்தால் சாதத்தோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம்.
அந்த வவையில் சுவையான தட்டை பயறு சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊற வைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம்.
ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த சுவையான சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தட்டை பயறு சாதம் | Thattapayaru Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 2 கப் அரிசி
- 1/2 கப் தட்டை பயறு
- 1/2 கப் பட்டாணி
- 4 பெரிய வெங்காயம்
- 5 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 4 பச்சை மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- புதினா, கொத்தமல்லி தேவையான அளவு
செய்முறை
- முதலில் தட்டை பயறு மற்றும் பட்டாணியை தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் பிரியாணி தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் கறிவேப்பிலை, புதினா இலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். அதன்பிறகு பட்டாணி மற்றும் தட்ட பயறு சேர்த்து கலந்து விடவும்.
- பின் அரிசியை நன்கு அலசி தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
- பின் விசில் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் விட்டு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான தட்டைபயிறு வறுவல் இப்படி செய்து பாருங்க! சாம்பார், ரசம், தயிர் சாதத்துக்கு நல்ல அருமையான காம்பினேஷனாக இருக்கும்!