வீட்டில் செருப்பை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க? உங்க பணக்கஷ்டம் இனி எப்பவுமே தீராது!!

- Advertisement -

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில பொருட்களை சரியான திசையில் வைக்காவிட்டால், அது நம் வாழ்க்கையை சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் காலணிகளை எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏனெனில் காலணிகள் நம் வீட்டில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் இரண்டையுமே கொண்டுவரக்கூடியது.

-விளம்பரம்-
காலணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக கழட்டக்கூடாது :

நம்மில் பலர் அவசரத்தில் அங்கும் இங்குமாக காலணிகளை கழற்றுகிறார்கள். காலணிகளை இப்படி கழட்டி எறிவது மிகவும் அபசகுணமாக கருதப்படுகிறது. இதைச் செய்வதால் வீட்டிற்கு வறுமை ஏற்படுகிறது, மேலும் இதனால் குடும்பத்தினர் நிதி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என‌ மூத்தோர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

வடக்கு மற்றும் கிழக்கு திசையில் செருப்பை வைக்கக்கூடாது வாஸ்து சாஸ்திரத்தின் படி வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காலணிகள் மற்றும் செருப்புகளை வைத்திருப்பது நல்லதல்ல என்று நம்பப்படுகிறது. இதைச் செய்வது வீட்டிற்கு எதிர்மறை சக்தியைக் கொண்டுவருகிறது மற்றும் இந்த திசை லட்சுமி தேவிக்கு சொந்தமானது என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த திசையில் செருப்பு ஸ்டாண்ட் மற்றும் செருப்பை வைத்திருப்பவர்கள் மீது லட்சுமிதேவி கோபம் கொள்கிறார்.

ஷூ ஸ்டாண்டில் மட்டுமே காலணிகளை வைக்க வேண்டும் காலணி மற்றும் செருப்புகளை எப்போதும் அதற்குரிய ஸ்டாண்டில் மட்டுமே வைக்க வேண்டும் என்று வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. அதனால் அவை அங்கும் இங்கும் கழட்டி விடப்படுவதில்லை. இதனால் வீடும் சுத்தமாக தோற்றமளிக்கும். வாஸ்து படி, ஷூ ரேக் எப்போதும் தெற்கு திசையில் வைக்கப்பட வேண்டும்.

வாசலில் காலணிகள் மற்றும் செருப்புகளை கழட்டி விடக்கூடாது :

-விளம்பரம்-

வீட்டின் வாசலில் செருப்பு மற்றும் காலணிகளை குவியலாக வைத்திருப்பவர்கள் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் வாஸ்து தோஷம் ஏற்படும். சத்தம் கேட்கும்படி வேகமாக காலணிகளை கழற்றுவது வீட்டிற்கு அசுபத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இதனால் வீட்டில் உள்ளவர்களிடையே மோதல் ஏற்படலாம்.

எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து படி, காலணிகள் மற்றும் செருப்புகளை வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்க வேண்டும். இந்த திசையில் காலணிகளை வைத்திருப்பவர்கள், அவர்களின் வீட்டில் அமைதியான சூழ்நிலை நிலவும் மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.

-விளம்பரம்-