இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது தானிய வகைகள். பொதுவாக பச்சை பயிறில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் பச்சை பயிறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளது என்றால் அதைக் கொண்டு அடை தோசை செய்யுங்கள். இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு காலை நேரத்தில் பச்சை பயிற்றில் செய்த அடை, தோசை, உப்புமா ஆகியவற்றை கொடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பச்சை பயறை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல அடை தோசை செய்து கொடுத்துப் பாருங்கள்.
நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை இப்படி தோசை செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த பச்சை பயறு அடை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பச்சை பயறு அடை தோசை | Green Gram Adai Dosa Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 பெரிய வெங்காயம்
- 1 கேரட்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 10 பச்சை மிளகாய்
- 4 கப் பச்சை பயறு
- 2 டேபிள் ஸ்பூன் பச்சரிசி
செய்முறை
- முதலில் பச்சை பயரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து விட்டு அதனுடன் பச்சரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
- பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் கேரட்டை துருவி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- பின் அரைத்த மாவுடன் பெருங்காயத் தூள், வதக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி எடுத்து தோசையாக வார்த்து இருபுறமும் நன்கு சிவக்க வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை பயறு அடை தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!