இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் தம்ஆலு கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நம்மில் பலருக்கு எளிமையான முறையில் சப்பாத்தி செய்யத் தெரிந்த அளவுக்கு, அதற்கேற்ப கிரேவி செய்ய தெரியாது. ஆனால் சுவையான கிரேவி செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான்.
பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் பஞ்சாபி முறையில் ஆலு வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்கள். வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. ஆலு கொண்டு பஞ்சாபி தாபா ஸ்டைலில் எப்படி ஒரு கிரேவி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த தம் ஆலு கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தம் ஆலு கிரேவி பஞ்சாபி சுவையில் இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
பஞ்சாபி தம் ஆலு கிரேவி | Dum Aloo Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி பேபி உருளைக்கிழங்கு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
அரைக்க :
- 1 துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 துண்டு இஞ்சி
- 6 பல் பூண்டு
- 8 முந்திரி
- 2 தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- 5 காஷ்மீர் மிளகாய்
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- மசாலா நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள் சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். கிரேவி சிறிது கெட்டியாக ஆரம்பித்தும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- பின் இறுதியாக கஸ்தூரி மேத்தி தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சூடான தம் ஆலு கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான பஞ்சாபி சமோசா இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி!