என்னதான் நம்ம தென்னிந்தியால இருந்தாலும் வட இந்தியால இருக்குற எல்லா உணவுகளையும் நம் டேஸ்ட் பண்ணி இருப்போம் .அதையே நம்ம வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். அதுல நம்ம அடிக்கடி செய்யக்கூடியது தான் சப்பாத்தி சப்பாத்தியும் வட இந்தியாவுலதான் இருந்து வந்தது இல்லையா. ஆனா இப்போ சப்பாத்திக்கு சைடிஷ் ஆனா பன்னீர் பட்டர் மசாலா பாலர் பன்னீர் எல்லாமே வட இந்தியாவுல இருந்த தான் வந்தது. ஆனா டேஸ்ட் பாத்தீங்கன்னா செம ரிச்சா சூப்பராவே இருக்கும்.
அந்த வகையில எல்லார் வீட்டிலும் அடிக்கடி பன்னீர் பட்டர் மசாலா செய்வோம் ஆனா ஒரு சிலர் மட்டுமே பாலக் பன்னீர் செய்வாங்க. ஆனா ரொம்பவே ஆரோக்கியமான பாலக்கீரையில் இருந்து செய்யக்கூடிய இந்த பாலக் பன்னீர் நம்ம எல்லாரும் செஞ்சு சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது என்று சொல்லலாம். பஞ்சாப்ல ஃபேமஸா இருக்க கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தி கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சப்பாத்திக்கு எப்பவுமே ஒரே மாதிரியான சைடிஷ் குருமா வச்சு கொடுத்தா குழந்தைகளுக்கு போர் அடிச்சிடும் அதனால சாப்பிட மறுப்பாங்க. அதோட குழந்தைகளுக்கு நம்ம கீரையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். அந்த வகையில ரொம்ப டேஸ்டியான சத்தான சப்பாத்திக்கு வச்சு சாப்பிட ரொம்பவே அருமையான காம்பினேஷனான இந்த பாலக் பன்னீர் செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ரொம்பவே விரும்பியும் சாப்பிடுவாங்க அதே நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
இந்தப் பாலக் பன்னீர் செய்வது ரொம்பவே ஈஸி தாங்க. கடையில கிடைக்கிற மாதிரியே நம்ம சூப்பரான டேஸ்ட்ல வீட்டிலேயே சீக்கிரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். இந்த பாலக் பன்னீர் செய்வதற்கு ரொம்ப எல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை ரொம்பவே ஈஸியான முறையில் நம்ம செய்யலாம். வாங்க இப்போ இந்த சூப்பரான பாலக் பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாலக் பன்னீர் | Palak Paneer Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கட்டு பாலக் கீரை
- 1 கப் பச்சை பட்டாணி
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 100 கிராம் பன்னீர்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 6 முந்திரி பருப்பு
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- வெண்ணெய் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பட்டாணியை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரிக்கையறை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற வைத்த மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பாலக் கீரை நன்றாக கழுவி சுத்தம் செய்த பத்து நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்த நன்றாக வதக்கவும். பிறகு அதில் சீரகத் தொழில் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு வேக வைத்துள்ள பட்டாணி அரைத்து வைத்துள்ள பாலக்கீரை அனைத்தும் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரிக் கலவை சேர்த்த பிறகு, பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
- பன்னீர் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான பாலக் பன்னீர் தயார்.