மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் பன்னீர் சில்லி ப்ரை. இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். மேலும் இந்த பன்னீர் பெப்பர் ப்ரையை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திக்கும் போது செய்து கொடுக்கலாம். பன்னீர் டேஸ்ட்டான உணவு என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் பன்னீர் ஹெல்த்தியான உணவும் கூட. இந்த பன்னீரை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் நமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன.
பன்னீரில் கால்சியமும், புரதச்சத்துக்களும் உள்ளன. மேலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. வலுவான பற்கள் மற்றும் எலும்பு பெறவும், உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்தவும், உடல் மற்றும் மூட்டு வலியை குறைக்கவும் உதவுகிறது. இது தவிர பன்னீரில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை கீல்வாதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இன்னும் பல விதமான நன்மைகளை பன்னீரில் உள்ளன. இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள பன்னீரில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சுலபமாக பன்னீர் சில்லி ப்ரை செய்யலாம். இதை சப்பாத்தி, பரோட்டா, தவிர்த்து சீரக சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம் ஆகியவற்றுடன் இது சுவையாக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். இன்று இதை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
பன்னீர் சில்லி ப்ரை | Paneer Chilli Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 பாக்கெட் பன்னீர்
- 2 பெரிய வெங்காயம்
- 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கப் தயிர்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
- 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
செய்முறை
- முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பன்னீர் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் தயிர், மிளகாய்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் கசூரி மேத்தி மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு பன்னீர் சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் கலந்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கலந்து விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து விடவும்.
- பன்னீர் நன்றாக ரோஸ்ட் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் சில்லி ப்ரை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!