சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு பல காய்கறிகளை சேர்த்து இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம். காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள்.
இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் உருளைக்கிழங்குக்கு மாற்று கிடையாது. மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள், இந்த உருளைக்கிழங்கு பன்னீர் கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு பன்னீர் கட்லெட் | Potato Paneer Cutlet
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரய பவுள்
தேவையான பொருட்கள்
- 150 கிராம் உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்தது
- 200 கிராம் பன்னீர் மிகவும் பொடியாக கட்செய்தது
- 100 கிராம் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 4 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித் தழை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 கப் ப்ரட் க்ரம்ஸ்
- 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- ஒருகடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் 2 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
- பின்னர் பன்னீரை சேர்த்து வதக்கவும். இதில் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
- பின் இதனுடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து ஆற விடவும்.
- ஒரு அகன்ற பௌலில் ப்ரட்க்ரம்ஸை கொட்டி வைக்கவும். பனீர்கலவையை தேவையான அளவு, தேவையான ஷேப்பில் உருட்டி ப்ரட்க்ரம்ஸில் உருட்டி வைக்கவும்.
- ஒரு பேனில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்து வைத்த பன்னீர் கட்லடை சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் கட்லட் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.