இஸ்லாமியர்களுக்கு என்னதான் பல வகையான பண்டிகைகள் இருந்தாலும் இந்த ரமலான் புனிதமான மிகவும் சிறப்பான ஒரு நாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் மாதத்தில் ஒரு மாத காலம் இஸ்லாமியர்கள் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பான காலம் காலமாக நடந்து கொண்டிருக்கின்ற ஒரு விஷயம். ஆனால் மற்ற மாதங்களில் நோன்பு திறக்காமல் ஏன் ரமலான் மாதத்தில் மட்டும் நோன்பு திறக்கிறோம் என்பதற்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
அரபிய மொழியில் ரமலான் மாதம் என்பது நம்முடைய பாவங்களை கரைத்து நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு மாதம். முழுவதும் நின்ற குர்ஆனை படிக்க ஒரு மிகச் சிறந்த மாதமாக இது கருதப்படுகிறது. இந்த நோன்பு காலம் காலமாக அனைத்து இஸ்லாமியர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஏன் நாம் இந்த ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் பசியுடன் விரதம் இருக்கிறோம் என்றால், மூன்று வேலை அனைத்தும் கிடைக்கின்ற நமக்கு ஒருவேளை கூட உணவு கிடைக்காதவர்களின் நிலையை புரிந்து உணர வேண்டும் என்பதற்காகத்தான் பட்டினியுடன் கூடிய விரதம் இருந்து அல்லாஹ்வை தொழுகை செய்கிறோம். இந்த
உலகில் இருக்கும் மிகவும் கொடுமையான ஒன்றான பட்டினியை அனைவரும் உணர வேண்டும் என்பதே இந்த நோன்பிற்கான காரணம். இது மட்டுமில்லாமல் இரவு நேரத்தில் இறைவனை நாடி இறைவனை முழுவதுமாக தொழுகை செய்பவர்களுக்கு அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் நடக்கும். நோன்பு என்பது பசியை உணர்வதற்காக மட்டுமில்லாமல் தீமைகளை விளக்கி நன்மைகளை மட்டுமே நினைத்து இறைவனுக்கு பயந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.பூப்பெய்த பெண்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயமாக நோன்பு இருக்க வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் நோன்பை கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. குழந்தைகள் கட்டாயமாக நோன்பு கடைபிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நீண்ட தூரம் பயணம் செய்கிறவர்கள் நோன்பு கட்டாயமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நோய் குணமான பின்பும் பயணத்தை முடித்த பிறகும் நோன்பை கடைபிடிக்கலாம்
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…