தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது சாமை அரிசி. சிறு தானியங்களில் சாமை முக்கியமானது. ஆனால் எப்பொழுது வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்ததோ அன்றிலிருந்து சாமை உள்ளிட்ட சிறுதானியங்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.சாமை அரிசியில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம்.
அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை. சொல்லப்போனால் சாமைவை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். தோசை, ஊத்தப்பம், புலாவ், உப்புமா என எது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது சாமை உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த சாமை உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.
சாமை உப்புமா | Samai Upma Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாமை அரிசி
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 4 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
- 2 கொத்து கறிவேப்பில்லை
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் சாமை அரிசியை நன்கு கழுவி, மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பாசி பருப்பை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து பின் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
- பின் பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் பாசி பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள சாமை அரிசியை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
- பின் இது ஆறியதும் இதனை எடுத்து வேறொரு தட்டில் ஆற விடவும். பின் சின்ன உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சாமை உப்புமா தயார். இதற்கு மிளகாய் சட்னி வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான சாமை வெண்பொங்கல் இப்படி ஒரு தடவை செய்து கொடுங்ஙள் விரும்பி சாப்பிடுவார்கள்!