சிலருக்கு கறி காய்களை விட மீன் என்றால் அதீத பிரியம் கொண்டு இருப்பார்கள். மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வித்தியாசமான முறையில் ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் ஒரு முறை செஞ்சு கொடுத்து பாருங்க பாராட்டு கண்டிப்பா உங்களுக்கு உண்டு.. சுவையான மீன் வறுவல் எப்படி இந்த முறையில் எளிதில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி ஸ்பைசி செட்டிநாடு மசாலா சேர்த்து மீனை வறுத்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
இப்படி சுவையான ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அனைவரும் விரும்பி சாப்பிடும் மீன் வருவலை இப்படி வீட்டில் உள்ளவர்களுக்கு வறுத்து கொடுக்கலாம். வேண்டாம் என்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.வாண்ட இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஸ்பைசி செட்டிநாடு மீன் வறுவல் | Spicy Chettinad Fish Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மீன்
- 2 தேக்கரண்டி மிளகு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 இன்ச் நீளம் இஞ்சி
- 8 பல் பூண்டு
- 1 எலுமிச்சை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையானஅளவு
- 1 தேக்கரண்டி சோளமாவு
செய்முறை
- மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் எலுமிச்சை சாறு மற்றும் உப்பூ சோள மாவு போட்டு பிசையவும்.
- சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர் பதனப் பெட்டியில் வைக்கவும்.
- பின்னர்,ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசறி வைத்த மீன் துண்டங்களில் ஒவ்வொன்றாய் போடவும்.
- இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும்.இந்த மீன் மிளகு வறுவல் நன்றாக இருக்கும்.