தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம். நமது கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடிய உணவு பண்டம் குழி பனியாரம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இதனை எளிதாக செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
குழிப்பனியாரத்திற்கான மாவில் இனிப்பு, காரம் என இரண்டு வகைகளில் பனியாரம் செய்யலாம். நாம் இப்போது மக்காச்சோள கார பனியாரம் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்குடிய உணவுகளில் குழி பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்து கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது.
இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக அதே நேரம் ஆரோக்கியமான முறையில் செய்து விடலாம். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கக் கூடிய இந்த மக்காச்சோள கார பணியாரம் ரொம்ப ரொம்ப சுலபமாக 10 நிமிடத்தில் செய்து விடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள் இருந்தால் இந்த குழி பணியாரத்தை செய்து கொடுக்க மிஸ் பண்ணிடாதீங்க. இனி மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள் சீக்கிரம் காலியாகிவிடும். ஆரோக்கியம் நிறைந்த இந்த மக்காச்சோள பணியாரத்தை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்காச்சோள கார பணியாரம் | Maize Spicy Paniyaram Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 குழிபணியார கல்
தேவையான பொருட்கள்
- 3 கப் மக்காச்சோளம்
- 1 கப் இட்லி அரிசி
- 1/4 கப் உருட்டு உளுந்து
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் மக்காச்சோளத்தை பிரித்து எடுத்து இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். அரிசியை ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
- பின் மாவு அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து கொள்ளவும்.
- பின் இவற்றை கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின் இந்த மாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- ஒரு பவுளில் இந்த வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி மாவை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் வேக விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான மக்காச்சோள கார பணியாரம் தயார். இந்த பணியாரத்தை கார சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!