இரவு தூங்கும் போது படுக்கை அறையில் வைக்கக்கூடாத சில பொருட்கள்..!

- Advertisement -

பொதுவாக நாம் இரவு தூங்கும் போது நம் பக்கத்தில் பல பொருட்களை வைத்துக்கொண்டு தூங்குவோம் அப்படி நாம் வைத்துக் கொண்டு தூங்கும் பொருட்களில் சில பொருட்கள் எதிர்மறையாற்றலை கொடுக்கக் கூடியது எனவே அதனை நாம் அருகில் வைத்து தூங்குவதால் நம் வீட்டில் பல பிரச்சனைகள் சண்டைகள் வரக்கூடும். எனவே எந்தெந்த பொருட்களை நம் படுக்கை அறையில் வைப்பது எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

இரவு தூங்கும்போது நம் அருகில் வைக்கக் கூடாத பொருட்கள்

முதலில் நாம் தூங்கும் படுக்கை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் சுத்தமாக இல்லை எனில் நேர்மறையான ஆற்றல் வரவே வராது நம்மைச் சுற்றி எதிர்மறையாற்றல் மட்டுமே இருக்கும். நாம் தூங்கும் படுக்கை அறையில் படுக்கைக்கு அடியில் துடைப்பம் வைக்கக் கூடாது. நாம் பொதுவாக நம்முடைய படுக்கை அறையில் மிகப்பெரிய கண்ணாடி வைத்திருப்போம் ஆனால் நாம் இரவு தூங்கும் பொழுது அந்த கண்ணாடி எதிர்மறையாற்றலை கொடுக்கும் எனவே இரவு தூங்கும் முன்பு அந்த கண்ணாடியில் திரை போட்டு மறைத்து விட்டு தான் தூங்க வேண்டும் அப்படி நாம் திரை போட்டு தூங்க மறந்து விட்டால் நம் வீடுகளில் அடிக்கடி சண்டைகள் வரும்.

- Advertisement -

புகைப்படங்கள்

எனவே கண்ணாடியை திரை போட்டு மறைத்து விட்டு தூங்குங்கள்.பொதுவாக இரவு தூங்கும் முன்பு நாம் பாத்ரூம் பயன்படுத்திவிட்டு கை கால்களை கழுவி விட்டு வருவோம் அப்படி வரும்பொழுது ஈர கால்களோடு படுக்கையில் வந்து படுக்கக் கூடாது நன்றாக துடைத்து விட்டு தான் வந்து தூங்க வேண்டும் அப்படி செய்யும் பொழுது நமக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். படுக்கையறையில் பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை சுவற்றில் மாட்டி வைத்திருப்பார்கள்ஆனால் நம் படுக்கையறையில் எப்பொழுதும் மிருகங்கள் படங்களையோ போர் சம்பந்தமான படங்களையும் வைத்திருக்கக் கூடாது அதற்கு பதிலாக பறவைகள் பூக்கள் மயில் இயற்கை சம்பந்தமான படங்கள் என மனதிற்கு இன்பத்தை தரக்கூடிய புகைப்படங்களை மட்டுமே படுக்கையறையில் வைக்க வேண்டும்.

தண்ணீர்

எப்பொழுதுமே அனைவரும் இரவு தூங்கும் போது அவர்களது அருகில் தண்ணீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் நாம் தண்ணீர் பாட்டில்களை நம் அருகில் வைத்து படுக்கக் கூடாது அது நம் தூக்கத்தை தாமதப்படுத்தும். முக்கியமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் வைத்துக் கொண்டு தூங்க கூடாது அதற்கு பதிலாக பித்தளை காப்பர் வெள்ளி போன்ற பாத்திரங்களில் தண்ணீர் வைத்து விட்டு தூங்கலாம். அதுவுமே அந்த தண்ணீரை கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு தான் தூங்க வேண்டும்.

செல்போன்

முக்கியமாக இரும்பிலால் ஆன பொருட்களை நாம் பயன்படுத்தக் கூடாது மீதி பயன்படுத்தினால் மனதளவில் நமக்கு பிரச்சனைகள் வரும். நாம் காலையில் எழுந்த உடனேயே நம் உள்ளங்கையை தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் உள்ளங்கையில் மகாலட்சுமி குடியிருப்பதாக சொல்லப்படும் எனவே உள்ளங்கையை பார்ப்பது மகாலட்சுமியை பார்ப்பது போன்ற ஒரு உணர்வினை நமக்கு தரும். இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைவருமே அவர்களது அருகில் செல்போனை வைத்துக்கொண்டு தான் தூங்குகிறார்கள் ஆனால் இந்த மாதிரி செல்போன் லேப்டாப் ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களை எல்லாம் அருகில் வைத்து தூங்குவது நம் மனதையும் உடலையும் பாதிக்கும் அதிலிருந்து வரக்கூடிய சில கதிர்வீச்சுகள் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே ஒருபோதும் இந்த பொருட்களை எல்லாம் அருகில் வைத்துக் கொண்டு தூங்க கூடாது. இப்பொழுது சொல்லப்பட்ட அனைத்து பொருட்களையும் நம் படுக்கை அறையில் இருந்து நீக்கிவிட்டு தூங்கினால் நமக்கு தூக்கமும் நிம்மதியாக வரும் மேலும் வீட்டிலும் எந்த பிரச்சனைகளும் சண்டைகளும் வரவே வராது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் வரவு அதிகரிக்க சமையல் அறையில் இந்த ஒரு பெட்டியில் காசுகளை போட்டு வையுங்கள் போதும்!