Home ஆன்மிகம் சனி பகவானிடம் இருந்து விடுபட்டு மார்ச் 17 ஆம் தேதி வரை பண மழையில் நனைய...

சனி பகவானிடம் இருந்து விடுபட்டு மார்ச் 17 ஆம் தேதி வரை பண மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள் யார்!

பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு போகும்போது அந்த ராசிக்காரர்களுக்கு இருக்கின்ற தோஷங்கள் அனைத்தும் நீங்கி புதியதாக குடியேறிய ராசிகள் சில கஷ்டங்கள் வரும் அதேபோல் கடகம் சிம்மம் விருச்சிகம் மகரம் கும்பம் மீனம் போன்ற ராசிக்காரர்கள் இடமிருந்து சனி பகவான் விலகுவதால் மார்ச் 17 வரையில் அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கப் போகிறது என்னென்ன தோஷங்கள் அனைத்தும் விலகப் போகிறது. பொதுவாக சப்தம சனி அஷ்டம சனி 1ம் சனி அர்த்தாஷ்டம சனி போன்ற தோஷங்களில் இருந்து இந்த ராசிக்காரர்கள் விடுபட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் சனீஸ்வர பகவான் இருப்பதால் அஷ்டம சனி தோஷம் உருவாகும். இப்பொழுது சனி அஷ்டாங்கமாக உள்ளதால் கடக ராசிக்காரர்களுக்கு அவர்கள் நினைத்ததெல்லாம் சீக்கிரத்தில் நிறைவேறும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற நன்மைகள் அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த காரியங்கள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேறும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுடைய சொத்து மதிப்பு அதிகரிக்கும். நீடு நாட்களாக உங்கள் கைக்கு வந்து சேராமல் இருந்த பணம் வந்து சேரும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாவது இடத்தில் சனி இருப்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் சில தேக்க நிலை உண்டாகும். இப்பொழுது சனிபகவான் அஷ்டாங்கமாக உள்ளதால் தோழி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்து வந்த அழுத்தம் பணிச்சுமை, சிக்கல்கள் என அனைத்தும் சரியாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய செல்வாக்கும் உயரும். உங்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டே இருந்த பதவி உயர்வும் கிடைக்கும். புதிய அரசியல் தொடர்புகள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி இருப்பதால் பல வழிகளில் நீங்கள் சந்தித்த இன்னல்களில் இருந்து வெளியேறலாம். வீடு வாகனம் சொத்து போன்ற பிரச்சனைகளில் இருந்து தடை நீங்கி நன்மைகள் நடக்கும். பதவி உயர்வு கிடைத்து உங்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவீர்கள். எனவே நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலைமையில் இருப்பீர்கள். அனைத்து இடங்களிலும் உங்களுக்கு செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருக்கும் மரியாதையும் அதிகமாகி கொண்டே தான் இருக்கும்

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் சனி இருப்பதால் பலவிதமான பிரச்சனைகள் இருக்கக்கூடும். வேலை முயற்சியில் தாமதம் ஏற்படுதல் பணத்தை இழந்து வாடுதல், எடுக்கின்ற சிறிய முயற்சிகள் கூட வீணாகிப் போகுதல், உடல்நிலை சரியில்லாமல் போகுதல் என பல பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இப்பொழுது எல்லாவிதமான பிரச்சனைகளிலிருந்தும் வெளிப்படுவீர்கள். குறிப்பாக பண பிரச்சனைகள் சரியாகும். வருமானம் நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு உயரும் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். வேலையை இழந்து வாடுபவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கிடைக்கும்.

-விளம்பரம்-

கும்ப ராசி

இப்போது சனியின் தாக்குதல் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்கள் அனைத்திலிருந்தும் விடுபட வாய்ப்புள்ளது. பலவிதமாக உங்களுக்கு வந்த பிரச்சனைகள் அழுத்தங்கள் தொல்லைகள் சண்டை சச்சரவுகள் என அனைத்தும் நீங்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் உங்களுக்கான முன்னுரிமையும் முக்கியத்துவமும் அதிகரிக்கும். உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியை மட்டுமே அனுபவிப்பீர்கள். பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு செயலை நீங்கள் செய்ய நினைத்திருந்தாலும் அது நிறைவேறும் நீங்கள் எந்த செயலை தொட்டாலும் அதிலிருந்து உங்களுக்கு பலவிதமான நன்மைகள் நிச்சயம் கிட்டும்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களின் மேல் இருந்த சனியின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடும். வருகின்ற நாட்களில் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சி காண்பீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து வைத்திருந்த புனித பயணங்களும் நிறைவேறும். வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளில் உள்ள உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும் மருத்துவச் செலவுகளும் குறைய தொடங்கும். வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் வரும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலமாக வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றமும் மாறுதல்களும் நடக்கும். நீங்கள் நினைத்து பார்க்காத நேரத்தில் உங்களுக்கு பண உதவியும் கிடைக்கும்.