நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க ஏன் அரசாங்க வேலை கூட கிடைக்க வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

வாழ்க்கையில் முன்னேற, ஒருவர் நாளுக்கு நாள் பல சவால்களையும் போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பலரும் புலம்பக்கூடிய விஷயம் என்ன வென்றால் பல ஆண்டுகளாக உத்தியோகத்தில் இருந்தும் சரியான பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கவில்லை, தொழில், வியாபாரத்தில் கடிமனமாக உழைத்தும் அதற்கான முன்னேற்றம் கிடைக்கவில்லை என யோசிப்பது உண்டு.

-விளம்பரம்-

தொழில், வேலையில் பல முயற்சிகளை மேற்கொண்டும், நீங்கள் எதிர்பார்த்த எந்த ஒரு வளர்ச்சியும் கிடைக்கவில்லை என மன கலத்தில் உள்ளீர்களா? அப்படியானால் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில வாஸ்து குறிப்புகள் உங்களை மேம்படுத்தவும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவக்கூடியதாக இருக்கும்.

- Advertisement -

திசை

நாம் வேலை செய்யும் மேசையை கிழக்கு திசையை நோக்கி போட வேண்டும். ஒரு வேளை நமது படிப்பு மேசை வேறொரு திசையை நோக்கி இருந்தால், மேசையின் மீது கண்ணாடியை வைக்கலாம். அது நல்ல ஆற்றல்களை பிரதிபலிக்கும். நமது படிக்கும் அல்லது வேலை செய்யும் இடம், அது நோக்கி இருக்கும் திசையானது, நம்மைச் சுற்றி இருக்கும் ஆற்றல்களை முடிவு செய்கிறது இதனால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும், அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

தண்ணீர் குழாய்

குழாய்கள் எப்போதும் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி தான் இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குழாய்கள் மற்றும் நீர் ஆதாரங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதில் ஏதேனும் கசிவு இருந்தால், அது பண இழப்பைக் குறிக்கும். எனவே கசிவு இருந்தால் அதனை உடனே சரிசெய்யவும்.

மரச் சாமான்கள்

உங்கள் படிப்பு அல்லது தற்போதைய வேலை மேசையின் மரச்சாமான்கள் மரத்தாலான மற்றும் வழக்கமான வடிவங்களில் இருக்க வேண்டும். அதாவது செவ்வகம் மற்றும் சதுர வடிவில் இருக்க வேண்டும் புதிதாக வட்ட வடிவத்திற்கு செல்ல வேண்டாம். சுழலும் அல்லது பிற நாற்காலிகளுக்குப் பதிலாக உயர்ந்த பின் நாற்காலியைத் நீங்கள் இருக்கும் அறைக்கு பயன்படுத்தவும். உயர் பின் நாற்காலிகள் ஆதரவைக் குறிக்கின்றன மற்றும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உங்கள் வசதிக்கேற்ப ஸ்டூல் அல்லது எளிய மர நாற்காலியையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

-விளம்பரம்-

தாவரங்கள்

வாஸ்து படி, தாவரங்கள் சுற்றுச்சூழலில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை அகற்ற உதவுகின்றன. இது நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவுகிறது. பணத்தை ஈர்க்கவும் மன அழுத்தத்தை போக்கவும் ரோஸ்மேரி, லாவெண்டர் மற்றும் ஸ்பைடர் செடி போன்ற தாவரங்களை நமது வீட்டில் வைத்து பராமரிக்கலாம். இவை காற்றைச் சுத்திகரித்து, உங்கள் படிக்கும் அறைக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் தாவரங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

சரியான விளக்குகள்

சரியான ஒளி விளக்குகள் அல்லது வெளிச்சமான விளக்குகள் மிகவும் சுவாரஸ்யமான காட்சிகளை உருவாக்குகின்றன மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கின்றன. உங்கள் படிப்பிலும் அல்லது உங்கள் பணி மேசையின் மேலேயும் தரை விளக்குகள் அல்லது எளிய எல்இடிகளை வைக்கவும். இவை உங்கள் வீட்டை நன்கு வெளிச்சமாக வைத்திருப்பது வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.

மேஜையில் வைக்க வேண்டிய பொருட்கள்

உங்களுக்கு விருப்பமான இறைவனின் படம், மூங்கில் செடி, நாணயக் கப்பல், ஜப்பானிய பூனை போன்றவற்றை வைக்கலாம். இது உங்கள் மனதில் ஒருவித நேர்மறை சிந்தனையையும், உற்சாகத்தையும் தூண்டும். எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும். அல்லது பாதாம் மற்றும் பிஸ்தா பருப்பு போன்றவற்றை உங்கள் மேஜையில் வைக்கலாம். இவை மிகவும் ஆரோக்கியமான மற்றும் சரியான தேர்வு.

-விளம்பரம்-