இந்த 5 ராசிக்கார்கள் தான் கற்பூர புத்தி கொண்ட புத்திசாலிகளாம்! எந்த 5 ராசிகள் தெரியுமா ?

- Advertisement -

இந்த உலகில் இருக்கும் அனைவரும் அறிவாலிகள் தான். ஆயினும் இந்த 12 ராசிகளில் ஒரு ஐந்து ராசிக்காரர்கள் மட்டும்  புத்திசாலிகளாக இருப்பார்களாம். அப்படி எந்த ஐந்து ராசிகளுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருக்கும் என்பதை காண இருக்கிறோம். புத்திசாலித்தனம் என்பது அறிவுடன் தொடர்புடையது அல்ல அல்லது படிப்போடு சம்பந்தப்பட்டதும் கிடையாது. புத்திசாலித்தனம் என்பது ஒரு செயல் நடக்கும் பொழுது அதற்கான எதிர்வினை எப்படி இருக்கிறது தெளிவாகவும் சரியாகவும்  முடிவு எடுப்பதை புத்திசாலித்தனம் என்று கூறுவார்கள். ஒவ்வொரு செயலுக்குமான அதனுடைய எதிர் செயல் தெளிவாகவும் அறிவு பூர்வமாகவும் சரியானதாகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள் என்று கூறுவார்கள்.

-விளம்பரம்-

அப்படி எந்த ராசிகாரர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அனைத்து ராசிக்காரர்களும் அறிவாளிகள் தான் ஆனால் இந்த ஐந்து ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்களாம். இந்த புத்திசாலித்தனமான செயலில் அவர்கள் பல நன்மைகளை ஈட்டி இருப்பார்களாம். அப்படி எந்த ஐந்து ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருந்து அவர்கள் வாழ்வில் நன்மைகளையும் லாபங்களையும் பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருப்பார்கள் அப்படி அந்த ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடிய கிரகங்களின் தசா புத்தியை பொறுத்து அவர்கள் புத்திசாலிகளாக இருப்பது கணக்கிடப்படுகிறது.  யார் அந்த ஐந்து ராசிக்காரர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பார்களாம். தானாக முன்வந்து புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்புடையவர்களாக இருப்பார்கள். ஆகையால் இவர்கள் புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பொழுதே அவர்களின் அறிவுக் கூர்மையை விரிவு படுத்திக் கொள்வதற்காக ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் நடைபெற வேண்டும் என்றால் அவர்களை போல் சுலபமாக அந்த செயலை கிரகித்துக் கொள்பவர்கள். இவர்கள் ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு புத்திசாலிகள் ஆகவும் பல துறைகளில் பன்முகத் தன்மைகள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு அவர்கள் செய்யும் செயலை திறம்பட செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மிகவும் பிடித்த பாடம் கடிதம் ஆகும். ஆகையால் இவர்கள் அதிக அளவு ஒரு செயலை ஆராய்ந்து பார்த்து செயல்படுபவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு செயல் செய்தாலும் அதை தெளிவாக ஆராய்ந்து அதில் நல்வினை தீவினைகளை எதிர்பார்த்து செய்யக்கூடியவர்கள். இவர்கள் அறிவை தேடுவதற்கு அறிவை மேம்படுத்துவதற்கும் இயற்கையாகவே  ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்களாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் நல்லிணக்கத்திற்கு வழியை வகுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் அறிவார்ந்த சிந்தனைகளையும் புதிய நோக்கங்களையும் பாராட்டுபவர்களாக இருப்பார்களாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஏதோ ஒரு இடத்தில் விட்டால் கூட அங்கிருந்து எப்படி பிழைத்துக் கொள்வது என்பதை தெரிந்து பிழைத்துக் கொள்வார்களாம். ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ளவரை சென்று ஆராய்ந்து புட்டு புட்டு வைப்பவர்களாக இருப்பார்களாம். அறிவு சார்ந்த விசயங்களில் விவாதங்களில் கலந்து கொள்பவராக இருப்பார்களாம். ஆகையால் இவர்கள் சிறந்த சமாதானம் மற்றும் ராஜதந்திரிகளாகவும் இருப்பார்கள்.

-விளம்பரம்-

மகரம்

மகர ராசிக்காரர்கள் வாழ்க்கை நடைமுறை மற்றும் ஒழுக்கமான வரைமுறைக்காக பெயர்போனவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் அறிவு சார்ந்த மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்களாம். ஒரு பிரச்சனை வந்தால் அந்த பிரச்சினை பற்றி யோசிக்காமல் அதிலிருந்து எப்படி வெளிப்படுவது என்பதை பற்றி யோசிப்பார்கள். எடுத்த துறையில் அடித்தளத்தை வலுவாக உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

கும்பம்

இடம், பொருள் ஏவல் பார்த்து பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே சுய சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களது புதுமையான யோசனைகள் பல இடங்களில் நன்மை பயக்கும். இவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றம் சார்ந்த ஆகிய துறைகளில் இருப்பார்கள். இந்த ராசி உடையவர்கள் பலர் ஆராய்ச்சியாளர்களாக இருப்பார்கள். பிரச்சனைகளை கையாளும் திறன் சூழ்நிலைகளை ஆராயும் திறனில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள்.