Home ஆன்மிகம் சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் அவருடைய சொந்த ராசியான கும்பராசிகள் பயணித்து வருவதால் இது அவருடைய ஆண்டாக கருதப்படுகிறது சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் ஏற்ப அவர்களுக்கு சனி பகவான் எப்பொழுதும் பிரதிபலன்களை கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் கும்ப ராசியில் இருக்கின்ற சனி பகவான் அப்படியே அவருடைய வக்கிர பார்வையை மாற்றி அதிர்ஷ்ட பார்வையால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலன்களை கொடுக்கப் போகிறார் அதில் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் மிகவும் நல்ல யோகம் ஏற்பட போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

மேஷ ராசி

மேஷ ராசியில் சனி பகவான் 11 வது வீட்டில் வக்கிர பயணத்தை தொடங்கியுள்ளார் எனவே மேச ராசிக்காரர்களுக்கு புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைத்து வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்தால் அதில் நல்ல லாபத்தை பெற முடியும் வேலை செய்யும் இடத்திலும் மகிழ்ச்சியை உண்டாகி உங்களுக்கு மரியாதையும் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைக்கூடும்.

மிதுன ராசி

ஒன்பதாவது வீட்டில் மிதுன ராசியில் சனிபகவான் வக்ர நிலையை தொடங்குகிறார் எனவே ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் நடக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கும் குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் விலகி நிம்மதி கிடைக்கும் மேலும் மாணவர்களாக இருந்தால் அவர்கள் கல்வியில் மிகவும் சிறந்த இடத்திற்கு செல்வார்கள்.

மகர ராசி

மகர ராசிகள் சனிபகவான் இரண்டாவது வீட்டில் வக்கிர நிலையை அடைந்துள்ளார் எனவே ஜூன் மாதத்தில் இருந்து சிறப்பான பலன்கள் அமைந்து எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு அமையும் பேச்சு திறமையால் அனைத்து வேலைகளையும் முடித்து உங்களுடைய ஆளுமை திறனையும் வளர்த்துக் கொள்வீர்கள்.

இதனையும் படியுங்கள் : 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

-விளம்பரம்-