Home ஆன்மிகம் 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும் நேரிடலாம் அது 12 ராசிகளையும் பாதிக்கும் அந்த வகையில் கிரகங்களில் தளபதியாக கருதப்படுகின்ற செவ்வாய் கிரகம் ஏப்ரல் 23ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்து விட்டார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பயணம் செய்து கொண்டிருக்கிறார் இதனால் இந்த மீன ராசியில் செவ்வாய் மற்றும் ராகு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மோசமானதாக கருதப்படும் யோகமான அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்குமே தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிக்காரர்கள் கஷ்டங்களை சந்திக்க போகிறார்கள் குறிப்பாக கடன் பிரச்சினைகள் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். இந்த அங்காரக யோகத்தால் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷப ராசி

இந்த அங்காரக யோகமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை கொடுக்கும் திருமண வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருக்கும். துணையுடன் நிறைய வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் அதனால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால் மிகவும் கவனமாக முதலீடுகள் செய்ய வேண்டும் முடிந்த அளவிற்கு முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த அங்காரக யோகம் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளை கொடுக்கும் மன உறுதி குறைந்து புதிய சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் முக்கியமாக ஆரோக்கியம் சம்பந்தப் பிரச்சினைகளில் அல்சர் முதுகு வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதில் தோல்வியை சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எதிரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

அங்காரக யோகமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு எட்டாவது இடத்தில் உருவாகி இருக்கிறதால் இந்த ராசிக்காரர்கள் நோய்களால் பாதிக்கப்படலாம் ஒரு சிலர் விபத்துக்களை சந்திக்கவும் வாய்ப்புள்ளது எந்த ஒரு புதிய காரியத்தை செய்வதாக இருந்தாலும் அதை செய்யாமல் இருப்பது நல்லது ஏனென்றால் கண்டிப்பாக அந்த வேலை தோல்வியை தான் கொடுக்கும் முக்கியமாக யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது அப்படி கடன் கொடுத்தால் அந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்காது இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை குறைப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.

இதனையும் படியுங்கள் : ஏப்ரல் 27ஆம் தேதி வரும் மகாயோகம்.. சதுர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்!

-விளம்பரம்-