Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் ஏப்ரல் 27ஆம் தேதி வரும் மகாயோகம்.. சதுர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்!

ஏப்ரல் 27ஆம் தேதி வரும் மகாயோகம்.. சதுர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்!

Vinayagar chathurthi
Vinayagar chathurthi

சதுர் என்பது வடமொழி சொல்லாகும். சதுர் என்றால் நான்கு என்று பொருள். கடவுளின் நான்கு கைகளை ‘சதுர்புஜம்’ என்பார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து நான்காவது நாள் சதுர்த்தி திதியாகும். சதுர்த்தி திதி வரும் தினம் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். முழுமுதற் கடவுளான விநாயக பெருமான் இந்த திதியில் பிறந்தவராவர்.

-விளம்பரம்-

இந்த திதியில் பிறந்தவர்கள் ரகசியம் நிறைந்தவர்களாக மற்றும் பேராசை கொண்டவர்களாகசதுர்த்தி திதியில் பிறந்தவர்கள் கீர்த்தியுடன் வாழ்வார்கள், பல பேரின் நட்பு இவர்களுக்கு இருக்கும், ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்து முடிப்பவர்கள், புகழ் பெறுவதற்காக பல நாடுகளுக்கு பயணிப்பார்கள். மந்திர தந்திரங்களில் விருப்பம் உள்ளவர்கள். வரும் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சங்கடஹர சதுர்த்தி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் சில ராசிகளுக்கு சிறப்பான நாளாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சதுர்த்தியால் அதிர்ஷ்டத்தை அள்ள போகும் ராசிகள் யார் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு‌ மனதை வாட்டிய கவலைகள் படிப்படியாக குறையும். ஆன்லைன் வர்த்தகங்களின் மூலமாக பணத்தை அள்ளுவீர்கள். குடும்பத்தில் பல நல்ல காரியங்கள் நடக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகான வாய்ப்புகள் வரும். விநாயக பெருமானின் அருளால் உங்களின் மன உறுதி பலப்படும். வீட்டில் மழலை சத்தம் எதிரொலிக்கும். பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீர்கள். திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் ஐஸ்வர்யம் மற்றும் நற்பலன்கள் கிடைக்கும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைப்பீர்கள்.திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலம் குடும்ப வாழ்க்கைக்கும் நல்லது. சகோதர, சகோதரி உறவு வலுவாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் சில நல்ல சூழ்நிலைகள் உருவாகலாம். புதிய ஆடை வாங்குவீர்கள். நகைகள் வாங்குவதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்டி பெற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்கள். பொருளாதார ரீதியில் வலுவடைவீர்கள். புதிய வேலையை தொடங்க இந்த நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். தொழில் விரோதிகளை துணிவுடன் வீழ்த்துவீர்கள்.

-விளம்பரம்-

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஒரு முக்கிய முடிவு எடுக்கும் நாளாக அமையும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். புதிய வீடு கட்டி குடி போவீர்கள். சகோதரருக்கு பண உதவி செய்வீர்கள். கலை துறையினர் புதிய சாதனை படைப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பாராத விதமாக பணம் வரும். தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்து வாங்குவதில் முனைப்பு காட்டுவீர்கள்.

மீனம்

இந்த நாளில் மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சிறப்பான செய்தி வரும். புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தோப்புக் குத்தகை மூலமாக நல்ல லாபம் பார்ப்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு உண்டு. பணியிடத்தில் மூத்தவர்களின் பாராட்டு கிடைக்கும்.‌ தொழிலில் துணிவோடு முதலீடு செய்யுங்கள். நல்ல பலனை அடைவீர்கள். அரசியலில் பதவி அல்லது சிறப்புப் பொறுப்பு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்ற யோகக்கார சில ராசிகள்!

-விளம்பரம்-