Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்ற யோகக்கார சில ராசிகள்!

குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்ற யோகக்கார சில ராசிகள்!

குரு பகவானின் மாற்றத்தால் பொதுவாக எல்லா ராசியினரும் தாக்கத்தை அனுபவிப்பார்கள் அந்த வகையில் எனது நன்மை தீமை என இரண்டும் இருந்தாலும் நன்மை பெற போகும் சில ராசிக்காரர்களும் இருக்கிறார்கள். குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை தான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார். குரு பகவான் ஒரு ராசிக்குள் நுழைந்து விட்டால் 13 மாதங்கள் இருந்துவிட்டு தான் வருவார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இப்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் உடைய எதிரி ராசியான ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். மேலும் வியாழனும் சுக்கிரனும் ரிஷப ராசிக்குள் மே முதல் வாரத்தில் நுழையப் போகிறார்கள் எனவே இது அனைத்தினுடைய மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் நன்மைகளை பெற போகிறார்கள் அந்த மூன்று ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும் அதிர்ஷ்டம் அதிகரித்து பொருளாதார நிதியும் உயரும். நீங்கள் உங்கள் பணத்தை யாரிடம் ஆவது இழந்து இருந்தால் அந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலிலும் முதலீடு செய்து அதில் நல்ல லாபத்தையும் பெறுவீர்கள்.

ரிஷப ராசி

இந்த ரிஷப ராசிக்குள் தான் கிரகங்களின் சேர்க்கையும் மாற்றமும் நடக்கப் போகிறது எனவே அது ரிஷப ராசிக்கு நன்மையை கொடுக்கும். எந்த வேலையில் இருந்தாலும் அதில் வெற்றியை மட்டுமே பெறுவீர்கள் குடும்பத்தில் இருந்த பல சண்டை சச்சரவுகள் குறைந்து மகிழ்ச்சி மட்டுமே அதிகரிக்கும். கடுமையாக உழைக்கின்ற மக்களுக்கு தொழில் இலாபம் ஏற்பட்டு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகளும் அமையும்.

சிம்ம ராசி

குரு பகவானின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும் அதில் முதலாவதாக அவர்கள் எந்த தொழிலில் இருந்தாலும் அந்த தொழில் அமோகமாக இருக்கும் லாபமும் அதிகமாக கிடைக்கும். சமுதாயத்தில் மரியாதையும் அதிகரிக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் அதிகரித்து நிதி நிலைமையும் அதிகரிக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண புதாதித்ய யோகத்தால் ஜக்பாட் அடிக்க போகும் ராசிகள்..!