Home ஆன்மிகம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண புதாதித்ய யோகத்தால் ஜக்பாட் அடிக்க போகும்...

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண புதாதித்ய யோகத்தால் ஜக்பாட் அடிக்க போகும் ராசிகள்..!

ஜோதிடத்தை பொருத்தவரையில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது மற்ற ராசிக்கு ஒரு சில நல்ல விஷயமும் அதே சமயத்தில் தீய விஷயங்களும் நடைபெறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசன் ஆகிய புதன் தற்போது மேஷத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது ஆனால் ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு பிறகு மீன ராசிக்குள் நுழையும். மீன ராசியில் ஏற்கனவே சூரியன் பயணித்துக் கொண்டிருப்பதால் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் மற்றும் மீன ராசிகள் சுக்கிரனும் புதனும் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குவார்கள். ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்கப் போவதால் இந்த ராஜயோகங்களால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷப ராசி

ரிஷப ராசியில் 11 வது வீட்டில் இந்த இரு ராஜயோகங்களும் உருவாகப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை லாட்டரி டிக்கெட்டுகள் போன்றவற்றில் நல்ல லாபம் கிடைத்து குழந்தைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைத்து மொத்தத்தில் வருமானத்தில் நல்ல மாற்றம் கிடைத்து அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

சிம்ம ராசி

சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் புதாதித்ய ராஜ யோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போவதால் இந்த ராசிக்காரர்கள் உடைய நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் உள்ளவர்கள் அதனை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாகனம் நிலம் போன்றவைகள் வாங்கலாம். குடும்ப உறவுகளின் ஆதரவு கிடைக்கும் அதே போல் ஆரோக்கியமும் மிகவும் நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திட்டமிட்ட படியே நிறைவேறும்.

மீன ராசி

மீன ராசியின் முதலாம் வீட்டில் புதாதித்ய ராஜ யோகம் மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகப் போவதால் வணிகம் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் நல்ல வேலையே கிடைக்கும். தொழில் ரீதியாக வருமானம் அதிகரித்த வியாபாரத்தில் புது ஆர்டர்களும் வந்து குவியும். மொத்தத்தில் இந்த ராஜ யோகத்தால் யோகக்காரர்களாக இந்த ராசிக்காரர்கள் மாறிவிடுவார்கள்.

இதனையும் படியுங்கள் : 12 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையும் புதன் மற்றும் வியாழனால் அதிர்ஷ்டம் மழையில் நனைய போகும் ராசிக்காரர்கள்!

-விளம்பரம்-