Home ஆன்மிகம் சனிப்பெயர்ச்சியால் இந்த சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடைய போகிறார்கள்!

சனிப்பெயர்ச்சியால் இந்த சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடைய போகிறார்கள்!

பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை அடையப் போகிறார்கள். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சென்றால் அங்கு நீண்ட காலம் தங்கி விடுவார். தற்பொழுது சனி பகவான் அவருடைய மூலத் திரிகோணமான கும்ப ராசியில் இருக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசிக்கு சஞ்சரிப்பதால் ராஜயோகத்தை நிகழ்த்தப் போகிறார்.

-விளம்பரம்-
சனிப் பெயர்ச்சி

இந்த அரிய ராஜயோகமானது ஐந்தாவது ஆண் ராஜயோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் தான் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். சனி பகவான் மற்ற ராசிகளில் இருப்பதைவிட அவருடைய சொந்த ராசியான கும்பம் அல்லது மகர ராசியில் இருக்கும் போது தான் இந்த ராஜயோகம் தோன்றுகிறது. மேலும் துலாம் ராசி மையத்தில் இருக்கும். எனவே தான் ஒரு சில ராசிக்காரர்கள் பெரும் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறார்கள் அந்த ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் பெரும் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் அவர்களுடைய வாழ்க்கையே மாறப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத பல திருப்பங்கள் அமையும். உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் குடும்பத்துடன் நல்ல புரிதல் ஏற்பட்டு மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள். நீதிமன்றம் சம்பந்தமான சில பிரச்சினைகளும் தீர்ந்து போகும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத நல்ல வேலை கிடைக்கும்.

மகர ராசி

சனிபகவானின் இந்த ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று சொல்லலாம். செல்வ வீட்டில் சனிபகவான் அமைவதால் அனைவருக்கும் நல்ல காலம் வரும். இந்த நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கதவை தட்டும். புதிய வீடு நிலம் போன்றவைகளை வாங்கக்கூடிய சூழல் பிறக்கும். வியாழன் நட்சத்திரத்தில் சனி இருப்பதால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

கும்ப ராசி

கும்ப ராசியில் தான் இந்த வருடத்துடைய மிகப்பெரிய ராஜயோகம் உருவாகப் போகிறது ஏனென்றால் சனி பகவான் கும்ப ராசியில் தான் தற்பொழுது இருக்கிறார். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றியை மட்டுமே அடைவீர்கள். நீதிமன்றம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டு நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். மற்றவர்களோடு சேர்ந்து செய்யும் கூட்டு தொழில் உங்களுக்கு லாபத்தை கொடுக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ராகு பெயர்ச்சியால் ஆபத்தை சந்திக்கப் போகும் மூன்று ராசிகள் யார் தெரியுமா?