அதிர்ஷ்டம் என்பது அனைவரும் வாழ்விலும் எப்போதவது சில சமயங்களில் நடக்கும் சில நபர்களுக்கு தங்களது வாழ்வில் எப்பொழுதும் அதிர்ஷ்டவசமாக சில சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும். சிலருக்கு அதிர்ஷ்டம் என்பதற்கான வாய்ப்புகள் அவரது வாழ்வில் கம்மியாகவே தான் இருக்கும். இந்த அதிர்ஷ்டம் என்பது இந்த சமுதாயத்தில் நாம் செய்யும் பழக்க வழக்கங்கள் மூலமாகத்தான் நம்மை வந்து அடையும் என்பது உங்களுக்கு தெரியுமா ?
ஆம் உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் யாரோ ஒருவர் கஷ்ட காலத்தில் இருக்கும் பொழுது அவர்கள் உதவி செய்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் கஷ்டப்படும் பொழுது அதற்கான பலன் உங்களுக்கும் கிடைக்கும் இதை நாம் அதிர்ஷ்டம் என்ற எடுத்துக் கொள்கிறோம். உண்மைதான் அப்படி நம் வாழ்வில் எப்பொழுதும் அதிர்ஷ்டம் நிலையாக இருந்து கொண்டே இருப்பதற்காக ஆன்மீகமும் நம் சாஸ்திர சமுதாயங்களும் நமக்கு கோரும் 14 விஷயங்களை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பை நாம் காணலாம் வாருங்கள்
எப்போதும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உங்களின் உள்ளங்கை முகத்தில் படும்வண்ணம் மூன்று முறை தினசரி செய்து வாருங்கள்.
அதே போல் காலையில் எழுந்தவுடன் இரண்டாவது வேலையாக வாயை சுத்தமாக கொப்பளித்து விட்டு, சுத்தமான தேன் சுவையுங்கள் அதன் பிறகு குளிக்க செல்லுங்கள் மேலும் சூரியனை தினமும் காலை வணங்குவதற்கு மறக்க வேண்டாம்.
இனிமேல் தினமும் உங்களின் பெற்றோர், உங்களை விட வயதில் மூத்த பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெறுவது. பெரியவர்களை அவமரியாதை செய்யாதிருந்து பனிவுடன் நடந்து கொள்ளுதல்.
நீங்கள் எப்பொழுதும் அமர்ந்து உணவுண்ணுவதற்கு முன்பு, விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் முடிந்த அளவு உணவு பகிர்ந்து வாருங்கள்.
தினசரி நீங்கள் இரவு தூங்கும் முன்னர் செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து அதில், ஒரு டீஸ்பூன் அளவு சுத்தமான தேன் கலந்து அதில் தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைத்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் மறுநாள் காலை எழுந்ததும் இதை குடித்து வாருங்கள்.
நமது இந்து புராணங்களும், இதிகாசங்களும் பெண் என்பவள் தான் இந்த உலகின் ஆதி சக்தி என குறிப்பிட்டிருக்கிறது. அதனால் பெண்களை எப்பபோதும் மதிக்க வேண்டும் மதிப்மபாடு நடத்த வேண்டும். அதிலும் முக்கியமாக தாய் மற்றும் தாரத்திடம்.
பசு, பறவை, நாய் என அனைத்து விலங்குகளிடம் அன்பாக இருங்கள் முடிந்த அளவிற்கு அவர்களை பராமரித்து உணவளித்து வாருங்கள்.
வீட்டில் எங்கேனும் ஒரு இடத்தில் மஞ்சள் துணியில் ரூ. 21 முடித்து வையுங்கள். நீங்கள் தொழில் அல்லது முக்கியமான வேலையாக வெளியே செல்லும் போது இந்த பணத்தை முடியாதவர்களுக்கு உதவியாக கொடுத்து வாருங்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் சுத்தமான தேனை ஊற்றி அதை வீட்டிற்கு வெளிய ஒதுக்குப்புறத்தில் வைத்துவிட்டு வாருங்கள்.
ஞாயிற்று கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் காலையில் வீட்டை விட்டு வெளியேறி போகும் போது துளசி இலையை சாப்பிட்டு விட்டு வெளியே செல்லுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தினமும் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதை எக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம்.
எப்பொழுதும் உங்களின் வலது கையில் கருப்பு கயிர் இருக்குமாறு கட்டிக் கொள்ளுங்கள்.
நாம் குடியிருக்கும் வீடாக இருந்தாலும் சரி, வேலை பார்க்கும் இடமாக இருந்தாலும் சரி எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்த வரை ஏழை, எளியவர்களுக்கு, இயலாதோருக்கு உதவி கரம் நீட்டுங்கள். அது பணமாக தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை அன்பாகவும், ஆறுதலவாகவும், உணவாக இருக்கலாம், சாலை கடக்க வைப்பது போன்ற சிறு சிறு உதவியாக கூட செய்யுங்கள்.