மார்கழி மாதம் என்று சொன்னாலே பலருக்கு மார்கழி மாதத்தில் கடும் குளிரை பற்றி தான் முதலில் நினைப்பார்கள் அந்த அளவிற்கு மார்கழி மாத குளிர் நம்மை வாட்டி வைக்கும். நாள் அதையும் தாண்டி மார்கழி மாதம் கடவுள்களின் மாதம் என்றே சொல்லலாம் அப்படி நாம் செய்யும் பூஜை வழிபாடுகள் நான் அனைத்துமே இந்த மார்கழி மாதத்தில் நமக்கு கை கொடுக்கும் அப்படி இந்த மார்கழி மாதத்தில் நாம் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள் என்றும் சில விஷயங்களை நம் முன்னோர்கள் கூறி இருக்கின்றனர். அப்படி மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன விஷயம் எதை செய்ய கூடாது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.
கோலம்
முதலில் நினைவு கொள்ள வேண்டியது மார்கழி மாதம் கடவுளை பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் உகந்த மாதம். இந்த மாதங்களில் திருமணம் செய்யக்கூடாது மேலும் குளிருக்கு பயந்து இரவிலே கோலம் போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் கோலம் போடுவது நாம் சிறு பிராணிகளுக்கு கூட தர்மம் செய்வதற்காக போடுவோம். அதை அழகுக்காக என்று இரவிலே கோலம் போடுவதை தவிர்க்க கூடாது.
தூங்க கூடாது
மார்கழி மாதத்தில் அதிகாலைக்கு பிறகு தூங்க கூடாது கண்டிப்பான முறையில் பொழுது விடிவதற்குள் எழுந்து குளித்துவிட்டு மார்கழி மாத காலை காற்றினை சுவாசிப்பது அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நல்ல உடல் நலத்தை தரும். மார்கழி மாதத்தில் எழுவது என்பது சற்று கடினமான செயல் தான் இருந்தாலும் மார்கழி மாதத்தில் முடிந்த அளவிற்கு வேகமாக எழுந்திருங்கள்.
விதை விதைக்க கூடாது
ஆடி மாதம் போல் மார்கழி மாதமும் விதை விதைக்க கூடாது ஏனென்றால் மார்கழி மாதம் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதம் அல்ல அப்படி மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியாக வளராமல் உயிர் தன்மையில்லாமல் போய்விடும். இதனால் மார்கழி மாதம் விதை விதைப்பதற்கு ஏற்ற மாதம் இல்லை.