நாம் வாழ்க்கையில் எது நமக்கு தேவைப்பட்டாலும், ஏதாவது ஒரு விஷயம் நமக்கு நடக்க வேண்டும் என்று நிலை வந்தாலும் நாம் நமது கடவுளிடம் சென்று புழம்பி தீர்த்து விடுவோம். ஆனால் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரியாமல் நீங்கள் எதற்கெடுத்தாலும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து உங்கள் குறைகளை சொல்லி புலம்பாதீர்கள். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடக்கும். உங்களுக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்பதற்காக உழைப்பு இல்லாமல் அப்படியே இருக்க முடியாது ஒரு விஷயத்தில் உங்களுக்கு பலன் குறைவாக கிடைக்கிறது என்றால் நீங்கள் இன்னொரு விஷயம் செய்யும் போது அதற்கான பலன் அதிகமாக கிடைக்கும் இதுதான் வாழ்க்கையின் நியதி.
சுயநலம் இல்லாமல்
அதனால் உங்களுடைய உழைப்புக்கு உரிய பலன் என்றுமே வீணாகப் போவதில்லை அதை கடவுள் உங்களுக்கு எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது நிச்சயமாக கொடுப்பார். அப்படி நாம் எந்தவித கோரிக்கையும் இல்லாமல் சுயநலமில்லாமல் கடவுளுக்காக மட்டும் நாம் கடவுளை வேண்டி நினைத்து சொல்லக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்தும் தொகுப்பில் நாம் காண உள்ளோம். இந்த மந்திரம் கிருஷ்ண பகவானின் பீஜ மந்திரம் என்று சொல்லப்படுவது. இந்த மந்திரத்தை நீங்கள் சொல்வதற்கு முன்பு கிருஷ்ண பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
” ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் கிருஷ்ணாயை
கோவிந்தாயை ஸ்வாஹா” இந்த மந்திரத்தில் இடம் பெற்றுள்ள ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் போன்ற இந்த வார்த்தைகள் தான் பிஜ வார்த்தைகள். அதாவது பிஜ மந்திரம் என்று சொல்வார்கள். அதாவது வேர்கள் என்று அர்த்தம் ஒரு ஒரு விதையை நீங்கள் விதைத்ததும், அந்த விதை முளைக்க வைத்து, பின் செடியாகி, செடியிலிருந்து மரமாகி, மரத்திலிருந்து பெரிய விருச்சமாக வளரும் போது அப்படி தான். இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சியும் உங்களால் விவரிக்க முடியாத அளவிற்கு பெரிய அளவில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
காலை நேரம்
இந்த பிஜ மந்திரத்தை எப்போது சொல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் இந்த மந்திரத்தை உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் நேரத்தில் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து சொல்ல தொடங்குங்கள். இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் போது எக்காரணம் கொண்டும் தெற்கு திசையை நோக்கி உட்கார கூடாது. இந்த மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்த பின் ஒரு நாளைக்கு குறைந்தது 27 முறையாவது உச்சரிக்க வேண்டும்.
மாலை நேரம்
அதேபோல் காலையில் உங்களுக்கு இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு நேரம் ஏதுவாக இல்லை என்பவர்கள். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் அதாவது 6 மணியில் இருந்து இரவு 10 மணிக்குள் மந்திரத்தை சொல்லலாம். மந்திரத்தை சொல்வதற்கு முன்பு குளித்துவிட்டு அல்லது கை, கால் கழுவி விட்டு கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை ஒரு முறை சொல்லிவிட்டு இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்தால் போதும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும் 48 நாளில் அதற்கான பயன்களை நீங்கள் உணரத் தொடங்கினீர்கள் அதன் பிறகு உங்கள் வாழ்வை அதிசயமாக இருக்கும்.