வாகனம் வாங்க விரும்புவர்கள் மற்றும் சம்பளம் அதிகரிக்க வேண்டுமா ? இதை மடடும் செய்யுங்கள் போதும்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் ஆண்களோ, பெண்களோ என யாராக இருந்தாலும் அவசியமா அவரவர்களுக்கு என ஒரு இரு சக்கர வாகன வைத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி பல பேருக்கு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறதோ அதை போல் பலருக்கு பைக் வாங்க வேண்டும் என்பது அவர்களின் வாழ்க்கையின் ஒரு கனவாக இருக்கும். சாதாரணமாக ஒரு நல்ல பைக் வாங்க வேண்டும் என்றால் கூட பண தேவை என்பது அதிகமாக இருக்கும். அதனால் இன்று சொந்தமாக இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

தேரோட்டம்

உங்களின் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேற வேண்டுமென்றால் மலை மீது அமைந்திருக்கிறது கோவில்களுக்கு சென்று அந்த கோவில்களில் தேரோட்டம் அன்று சென்று அந்த தேரோட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டு தேரின் கயிறு இழுப்பதில் பங்கு கொள்ளுங்கள். இப்படி நீங்கள் தேரை இழுக்கும் போது மனதார கடவுளை வேண்டி பைக் வாங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரார்த்தனை கண்டிப்பாக நிறைவேறும். உதாரணமாக பழனி மலையில் மாலை நேரங்களில் தேர் இழுபாருங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் இதில் கலந்துகொண்டு நீங்களும் தேர் இழுக்கலாம் இதுவும் சிறப்பானதாக இருக்கும்.

- Advertisement -

தேர் பொம்மை

இதை செய்ய முடியவில்லை என்றால் கடைகளில் இருக்கும் ஒரு அழகான தேர் பொம்மையை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தேர் உருவம் கொண்ட பொம்மையை உங்களுடைய வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். இந்த தேரை நீங்கள் எப்போதெல்லாம் பார்க்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் உங்களுக்கு பைக் வாங்க வேண்டும் என்ற உங்கள் ஆசை கண் முன் வந்து செல்லும். இந்த ஆசையை சீக்கிரம் உங்களுக்கு பைக் வாங்கக்கூடிய யோகத்தை சீக்கிரம் கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலன்களை கொடுக்கும்.

கோதுமை விளக்கு

என்னதான் இந்த பரிகாரங்கள் நாம் செய்தாலும் நாம் நினைத்த பொருளை வாங்குவதற்கு ஒரு நல்ல வேலையை கிடைத்து, கை நிறைய சம்பாதித்தால் நல்லா இருக்கும் அல்லவா. அதனால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், நீங்கள் செய்யும் தொழில் சிறப்பாக வளர்ந்து வருவதற்காகவும் ஒரு தீபம் போடலாம். அதற்கு கோதுமை மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து பின் விளக்கு போன்று தயார் செய்து கொள்ளுங்கள். இப்படி தயார் செய்த விளக்கை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 7 மணிக்குள் இந்த தீபத்தை கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைத்து சூரிய பகவானே மனம் உருகி வேண்டிக் கொண்டால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், வேலை பார்க்க இடத்திலும் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழில் நடக்க தானம்

மேலும் உங்கள் தொழிலில் லாபம் மென்மேலும் பெருக வேண்டும் என என்னுபவர்கள், நஷ்டத்தில் தொழில் செய்து வருபவர்கள் எல்லாம் இஸ்த்திரி போடுபவர்களுக்கு தானம் செய்யுங்கள் இல்லை உங்களாள் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள். உதாரணமாக இஸ்திரி போடுபவர்களின் வேலைக்கு முக்கியமாக தேவைப்படும் கரி துண்டு அல்ல புதியதாக இஸ்திரி பெட்டி போன்றவற்றை நீங்கள் தானம் செய்தால். நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த தொழிலும் கூட மெல்ல மெல்ல வளர்ந்து வந்து லாபத்தை ஈட்டி கொடுக்க ஆரம்பிக்கும்

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here