இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் வெறும் கேரட் மற்றும் பீன்ஸ் மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் அவற்றை மட்டும் கொண்டு அற்புதமான குருமா செய்யலாம். பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இதையே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தினம் குறைந்தது இரண்டு மூன்று காய்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பீன்ஸ் காரட் பொரியலுக்கு பதில் இப்படி ஒரு முறை குருமா செய்து பாருங்கள். காரட் பீன்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
சப்பாத்திக்கு எத்தனையோ டால், சப்ஜி, கிரேவி என்று பல வகையான சைட் டிஷ்கள் இருந்தாலும் நம்ம ஊர் குருமாதான் எவர்கிரீன் சைடு டிஷ்! இந்த கேரட் குருமா செய்வது மிகவும் சுலபம் மற்றும் பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால் இதை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமல்லாமல் எல்லா வகையான சாப்பாட்டு வகைகளுக்கும் சூப்பராக இருக்கும். இந்த குருமாவில் விருப்பப்பட்டால் ப்ராக்கோலி, பன்னீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இட்டி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துக்கும் சட்னி, சாம்பார் என ஒரே ரெசிபி செய்யாமல் ஒரு மாறுதலுக்கு இந்த கேரட் பீன்ஸ் குருமா செய்து உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை அசத்துங்கள்.
கேரட் பீன்ஸ் குருமா | Carrot Beans Kurma Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 3 கேரட்
- 50 கி பீன்ஸ்
- 3 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 2 பச்சை மிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் கசகசா
- 5 முந்திரி
தாளிக்க
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ் போன்றவை நன்கு கழுவி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மை போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- காய்கறிகள் பாதி வெந்ததும் தனியா தூள், மிளகாய் தூள், நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலந்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
- பின் குக்கரை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் இட்லி தோசை இடியப்பம் சப்பாத்திக்கு ஏற்ற கேரட் பீன்ஸ் குருமா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கறி குழம்பு சுவையில் கொண்டைக்கடலை குருமா இப்படி கூட செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று எல்லாத்துக்குமே அருமையாக இருக்கும்!