இப்போதெல்லாம் குழந்தைகளிடம் அதிகம் பிடித்தமான உணவு என்று கேட்டால் பிஸ்சா, பர்கர் வரிசையில் கேஎப்சி சிக்கனும் சேரும். இந்த ஈரலை வைத்து செய்யப்படும் இந்த க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை.கேஎப்சி சிக்கன் விட ருசியில் அபாரமாக இருக்கும்.. அதுமட்டும் அல்லாமல் ஆரோக்கியமான ஒரு சமையல் உணவும் கூட. மாலை வேலையில் சுவையான ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் அசைவ இருந்தால் இன்னும் நன்னடராக இருக்கும் என்று பல நாட்கள் தோன்றும். அப்படி பட்ட ஸ்னாக்ஸ் வகை தான் இந்த க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை.
க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை மிகவும் மொறுமொறுப்பாகவும் வேறுவிதமான சுவையிலும் இருக்கும். அட என்ன இது பெயர்களே வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அதேபோல் இதன் சுவையும் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கும் . சுடச்சுட டீ காபி குடிக்கும் போது பக்கத்தில் இப்படி ஒரு க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை இருந்தால் வேறு என்ன சொர்க்கம் வேணும். இறால் வைத்து மிக மிக எளிமையாக மொறு மொறு பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மழைக்காலத்தில் இந்த ரெசிபியை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை | Crispy Prawn Coconut Fry
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ இறால்
- 4 தேக்கரண்டி கடலை மாவு
- 4 தேக்கரண்டி அரிசி மாவு
- 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 2 தேக்கரண்டி சீரகத் தூள்
- 1 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- எண்ணெய் பொரிக்கதேவையான அளவு
செய்முறை
- தேங்காய் துருவல் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்த இறாலுடன் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
- ஒரு தட்டில் தேங்காய் துருவலுடன் சிறிது அரிசி மாவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- மசாலாவுடன் பிரட்டி வைத்திருக்கும் இறாலை தேங்காய் துருவலில் பிரட்டிக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை போட்டு சிறு தீயில் நன்றாக வெந்ததும் பொரித்து எடுக்கவும்.
- சுவையான க்ரிஸ்பி இறால் தேங்காய் ப்ரை ரெடி.