வடை அப்படின்னா ஞாபகத்துக்கு வருது மெது வடை தான். அதாவது உளுந்து வடை இந்த உளுந்து வடையை தான் ரொம்ப அதிகமா விரும்பி சாப்பிடுவோம் . அதுக்கப்புறம் கடலை பருப்பு வடை இந்த பருப்பு வடைகள்ல மற்ற பல பருப்புகளை கொண்டு வடை செய்ய தொடங்கிவிட்டோம். அப்படி என்ன வேற வேற விதவிதமான பருப்புகளை கொண்டு வடை செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம். இந்த கொள்ளு நிறைய புரதச்சத்துக்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக இருக்கிறதுனால இந்த கொள்ளை வடை செய்து சாப்பிடும்போது அது நமக்கு ரொம்ப நல்லது.
மாலை நேரம் சிற்றுண்டி உணவாக எடுத்துக் கொள்ளும்போது டீ கூட சேர்த்து சாப்பிடும்போது ரொம்ப சுவையா இருக்கும். இந்த கொள்ளுடன் வாழை பூவையும் சேர்த்து வடை செய்து கொள்ளலாம். ஒரு தாவரத்தோட கிழங்கு இருந்து இலைகள் வேர்கள் எல்லாத்துலயும் பயன் கொடுக்கக்கூடியது வாழைமரம். அந்த வாழை மரத்தில் இருக்கும் வாழைப்பூ அதிக துவர்ப்புசுவை உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை கொடுக்க கூடியது.
வாழைப்பூவில் இருக்குற அதிகப்படியான துவர்ப்புகள் சக்தி பெண்களுக்கு ரொம்ப நல்ல உதவி பண்ணும் பெண்களோடு கர்ப்பப்பை பிரச்சினைகளுக்கு அந்த வாழைப்பூ ரொம்பவுமே உதவியா இருக்கும். ஆகையினால் இந்த கொள்ளு பயறில் உள்ள ஊட்டச்சத்துகளோடு சேர்த்து வாழைப்பூவும் சாப்பிடும்போது இது மேலும் நல்ல பலன்களை நமக்கு கொடுக்குது. அதனால கொள்ளு மற்றும் வாழைப்பூ வடை செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்திற்கு மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த கொள்ளு வாழைப்பூ வடை ரொம்ப சுவையானதாக இருக்கும் கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும். இந்த கொள்ளை உணவில் எப்படி வேண்டுமானாலும் சேர்த்து செய்து கொள்ளலாம். கொள்ளை ஊற வைத்து பிறகு வடை செய்யனும் காரணம் என்னன்னா இருக்கும் நாம ஊற வைத்து அரைக்கும் போது தான் நமக்கு உபரி அதிகமா கிடைக்கும் . சரி வாங்க இந்த கொள்ளு வாழைப்பூ வடை எப்படி செய்யறது அப்படின்னு பார்க்கலாம்.
கொள்ளு வாழைப்பூ வடை | Horse Gram Banana flower Vada
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் கொள்ளு
- 1/2 கப் வாழைப்பூ
- 2 காய்ந்த மிளகாய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 பச்சைமிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- 2 சிட்டிகை பெருங்காயத் தூள்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கொள்ளை நீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
- பின்னர் கொள்ளை நன்கு கழுவி மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன், காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொர கொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.அந்த மாவில் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, கறிவேப்பிலையும் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாக பிடித்து லேசாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- பொரித்து எடுத்த வடைளை ஒரு தட்டில் வைத்து பரிமாறினால் சூடான சுவையான சத்து மிக்க கொள்ளு வாழைப்பூ வடை தயார்.