Home ஆன்மிகம் நம் வீட்டில் கடன் பெருகாமல் இருக்க கடிகாரத்தை மாட்டி வைக்கக் கூடாத திசை!

நம் வீட்டில் கடன் பெருகாமல் இருக்க கடிகாரத்தை மாட்டி வைக்கக் கூடாத திசை!

பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் கடிகாரம் இருக்கும் இந்த கடிகாரத்தை நாம் பயன்படுத்துவது நேரத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஒவ்வொரு வீட்டிலும் கடிகாரம் மட்டும் இல்லை என்றால் அந்த வீட்டில் வேலைகளே நடக்காது என்று கூறலாம். அந்த அளவிற்கு கடிகாரம் நம்முடைய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கும். நேரத்தை பார்க்க மட்டும் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லாத கஷ்டம் துரதிஷ்டம் என எது நடந்தாலும் அதற்கு காரணம் நம் வீட்டில் உள்ள கடிகாரமே என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்‌.

-விளம்பரம்-

ஒவ்வொரு வீட்டிலும் பல சுவர் கடிகாரங்கள் இருக்கும். ஆனால் அந்த சுவர் கடிகாரங்களில் ஒரு சில கடிகாரங்கள் சரியாக ஓடாமல் வேலை பார்க்காமல் இருக்கும். சில கடிகாரங்கள் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது அப்படியே நின்று விடும். அப்படி நம் வீட்டில் உள்ள சுவர் கடிகாரங்கள் ஓடாமல் நின்று விட்டால் நம்முடைய வாழ்க்கையும் அப்படியே நின்றுவிடும் என்று கூறுவார்கள். எந்த வேலையும் நடக்காமல் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காமல் அப்படியே நம் வாழ்க்கை நின்றுவிடும் என்று கருதப்படுகிறது. எனவே வீட்டில் உள்ள சுவர் கடிகாரங்கள் ஓடவில்லை என்றால் அதனை உடனே அகற்றி விட வேண்டும்.

தெற்கு திசை

நம் வீட்டில் சுவர் கடிகாரங்களை தெற்கு நோக்கிய திசையில் தொங்க விடக்கூடாது கிழக்கு மேற்கு வடக்கு என இந்த மூன்று திசைகளிலும் எதை திசையில் வேண்டுமானாலும் கடிகாரத்தை தொங்க விடலாம் தெற்கு நோக்கிய திசையில் தொங்க விட்டால் அது நம் வீட்டிற்கும் நமக்கும் ஆகாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். வீட்டின் நுழைவு வாயிலில் சுவர் கடிகாரத்தை நாம் தொங்கவிடக்கூடாது அது எதிர்மறை ஆற்றலை எடுத்துக் கொள்ளும் அப்படி எதிர்மறை ஆற்றலை எடுத்துக் கொண்டால் நம் வீட்டில் நிம்மதி இல்லாமல் எப்பொழுதும் பிரச்சனைகள் கடன் தொல்லைகள் எதிலும் வெற்றி கிடைக்காமல் போவது என பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே வீட்டின் பிரதான நுழைவு வாயிலில் கடிகாரத்தை தொங்க விடக்கூடாது.

உடைந்த கடிகாரம்

பொதுவாக நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் வந்தால் நமக்கு பரிசாக வரும் ஒரு பொருள் என்றால் அதிகமாக சுவர் கடிகாரம் தான். ஆனால் அந்த சுவர் கடிகாரம் ஒரு வேளை வேலை செய்யாமல் போய்விட்டால் நாம் அதை பரிசளித்தவர்களின் ஞாபகார்த்தமாக அப்படியே வைத்திருப்போம். அந்த சுகர் கடிகாரம் சில சமயங்களில் உடைந்திருக்கக்கூடும் அல்லது வேலை செய்யாமல் இருக்கக்கூடும் அப்படி உடைந்து போன வேலை செய்யாமல் இருக்கக்கூடிய கடிகாரத்தை நம் வீட்டில் வைத்திருப்பதால் உயிர் போகும் அளவிற்கு கூட ஏதாவது ஒரு பிரச்சினை நமக்கு வந்து சேரும் எனவே ஒரு போதும் உடைந்து போன கடிகாரங்களை நம் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் செருப்பை இந்த திசையில் மட்டும் வைக்காதீங்க? உங்க பணக்கஷ்டம் இனி எப்பவுமே தீராது!!

-விளம்பரம்-