இந்த ஒரு பொருளை அரிசி பானையில் வைத்து விடுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். அதனால் அனைவருமே அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வோம். அதாவது நாம் மிகவும் கடினமாக உழைத்து அந்த பணத்தை சேமித்து வைப்போம். ஆனாலும் அந்த செல்வம் நீண்டநாட்களுக்கு நிலைத்து இருக்காது ஏதாவது ஒருவகையில் செலவாகிவிடும். அதனால் நாம் மிகவும் வருத்தப்படுவோம். அதாவது நானும் தான் மிக மிக கடினமாகி உழைக்கிறேன், ஆனால் ஏன் என்னிடம் மட்டும் செல்வம் சேரவே இல்லை என்று வருத்தப்படுவோம். அதற்கு காரணம் தெய்வத்தின் அருள் இல்லாததுதான். குலதெய்வ அருள் இன்றி வேறு எந்த தெய்வத்தின் அருளும் கிடைப்பதில்லை என்கிறது சாஸ்திரம்.

-விளம்பரம்-

குலதெய்வ வழிபாடின்றி எந்தத் தெய்வ வழிபாடும் உதவாது என்பது ஐதீகம்! ஏனென்றால் பரம்பொருள் என்ற‌ பெரிய‌ தெய்வத்தையே அழைத்து வந்து நம்மிடம் சேர்ப்பிப்பது நமது குலதெய்வமே !! அதனால் தான் வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு அடுத்தடுத்த சந்ததியும் சகல சவுபாக்கியங்களும் பெறுவார்கள் என்பது நியதி. அந்த வகையில் நம் வீட்டிற்குள் இருக்கும் குலதெய்வத்திடம் நாம் வேண்டிய வரங்களை பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

குலதெய்வ வழிபாடு

ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் என்ற ஒரு கடவுள் தனியாக இருக்கும். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான். அதனால் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வர வேண்டும். நீங்கள் குலதெய்வ கோவிலுக்குச் செல்லும் போது ஒரு மஞ்சள் நிறத்துணியில் ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை நவகிரகங்களின் பெயரைச் சொல்லி எடுத்து வைத்து ஒரு மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த முடிச்சின்‌ மேல் உங்கள் குலதெய்வக் கோவில் கோபுரத்தின் நிழல் பட்டால் அவ்வளவு விசேஷம் வாய்ந்தது. இல்லையென்றால் கோவில் கொடிமரத்தின் கீழ் இந்த முடிச்சை வைத்து மனதார வேண்டி இந்த முடிச்சை வீட்டிற்கு எடுத்து வாருங்கள்.

நகை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள்

இந்த முடிச்சை வீட்டிற்கு எடுத்து வந்த பின் பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்து முடித்த பின், இதில் இருக்கும் நாணயங்களுள் மூன்றை மட்டும் எடுத்து நீங்கள் அரிசி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள். ஐந்து நாணயங்களை எடுத்து பருப்பு டப்பாவில் புதைத்து வைத்து விடுங்கள். மீதி இருக்கும் ஒரு நாணயத்தை மட்டும் மஞ்சள் நிற துணயில் கட்டி பணம் வைக்கும் இடத்தில் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதனை நீங்கள் வைக்கும் போது உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நாணயங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வ வளங்கள் மற்றும் தானியங்களை உயர்த்தி கொண்டே செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

குலதெய்வத்தின் அருளை பெறலாம்

இந்த வழிபாட்டை செய்யும் போது குலதெய்வம் உங்கள் வீடு தேடி வந்து அமர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறலாம். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. அதனால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள் நிச்சயமாக பலன்‌ கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் மழையாக பொழிய கார்த்திகை திருநாளன்று இந்த ஒரு பொருளை மட்டும் வாங்குங்கள் போதும்!!