கடன் தீர்ந்து செல்வம் சேர புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு!

- Advertisement -

புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும், மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு ஏதுவான மாதமாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது, பெரும்பேறு தரும் என்பார்கள். எனவே புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஒன்றையும் தவறவிடாமல் பெருமாளை வழிபட்டு வருவது சிறப்பானதாகும்.

-விளம்பரம்-

அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். இந்த நாளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து, லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு வழிகாட்டும். புரட்டாசி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், விரதம் இருந்து லட்சுமிதேவியை வழிபடுவதோடு, சில விஷயங்களையும் பின்பற்றினால் துன்பங்கள் விலகி லட்சுமியின் அருள்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

புரட்டாசியில் பைரவர் வழிபாடு

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்கு மிகவும் சிறந்தது. ராகு காலத்தில் சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

அஷ்ட லட்சுமியின் அருள் கிடைக்க

-விளம்பரம்-

வெள்ளிக்கிழமை மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு நெய் விளக்கில் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் விரும்பினால் சிவப்பு நிற மலர்கள், சிவப்பு நிற வஸ்திரம் அல்லது பைரவ பூஜைக்கு பொருட்கள் வாங்கிக் கொடுக்கலாம். காலபைரவரை வணங்கும் பொழுது மனதார நமக்கு இருக்கும் பிரச்சனைகளை கூறி நம்முடைய பிரார்த்தனையை முன்வைக்க வேண்டும்.

கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் நாம் ஒரு பிரார்த்தனையை வீட்டில் செய்ய வேண்டும். அதற்கு எட்டு 1 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது எட்டு 5 ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்து வைத்திருக்கும் நாணயத்தை மகாலட்சுமி தாயாரின் புகைப்படத்திற்கு முன் வைத்து விடுங்கள். பின் பசு நெய்யினால் மகாலட்சுமி தாயாரின் முன்பு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

அதன்பின் ஒரு தாம்பூல தட்டில் மஞ்சள் நிற துணி ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் குங்குமத்தினால் “ஸ்ரீம்” என்று எழுதிக் கொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 8 நாணயங்களை ஒவ்வொன்றாக வைக்க வேண்டும். இப்படி நாம் வைக்கும் பொழுது ஒவ்வொரு அஷ்டலட்சுமி தாயாரின் பெயரை கூற வேண்டும். அதாவது, ஒரு நாணயத்தை வைக்கும் பொழுது ஒரு லட்சுமி தாயாரின் பெயரை கூற வேண்டும். பின்னர் ஆறு முறை நாம் ஸ்ரீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நல்லது நடக்கத் தொடங்கும். நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் நிற துணையை ஒரு முடிச்சாக கட்டி நம்முடைய பீரோவில் வைத்து விடலாம். இதில் இருக்கும் நாணயத்தை நாம் சுபச் செலவுக்காக பயன்படுத்தலாம். அதாவது, நகை வாங்கும் பொழுது இந்த நாணயங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு. இதனை நாம் செய்யும் பொழுது பைரவரின் அருளும், மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : விருந்தினர்கள் வந்து சென்றவுடன் கனவன் மனைவிக்குள் சண்டை வருகிறதா! அப்போ இதான் காரணம்!