Home ஆன்மிகம் அதிர்ஷ்டமும், பணமும் வீடு தேடி வர இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!

அதிர்ஷ்டமும், பணமும் வீடு தேடி வர இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்!

பெரும்பாலான நபர்களுக்கு அவர்களின் குடும்ப மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவது அவர்களின் குடும்பமாக மட்டுமே இருக்கும். அப்படி அவரவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாகவும், குதூகலமாகவும், அமைதியாக வாழ்வதற்கு வாழ்க்கையில் பணமும், வீட்டில் நேர்மறை ஆற்றலும் நிரம்பி வழிய வேண்டும் அப்படி நாம் வீட்டிற்கு பணத்தையும் அதிக அளவிலான நல்ல சக்திகளையும் நம் வீட்டிற்கு கொண்டு வருவதற்காக சில பொருட்களை நம் வீட்டில் வாங்கியும் இல்லை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றுவதன் மூலமாக நாம் குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருப்பதற்கான வழிகளை ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் இன்று தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நாம் வீடுகளில் அழகுக்காக காற்றில் அசைந்தவாறு ஒலி எழுப்பும் சிம்மிகளை வீட்டில் தொங்கவிட்டு இருப்போம். ஆனால் அது வெறும் அழகுக்காக மட்டும் தொங்கவிடுவதில்லை நம் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் நம்மை ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி கூட்டிச்செல்லும். இந்த ஒரு பொருளை வாங்கி வீட்டில் வடக்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கியவாறு தொங்கவிட வேண்டும்.

வீட்டில் இருக்கும் ட்ரெஸ்ஸிங் டேபிள் படுக்கை அறையில் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் மாறாக தென்மேற்கு திசையில் பார்த்தவாறு இருந்தால் அது உங்களுக்கு வேண்டாத பல பிரச்சினைகளை கொடுக்கும்.

நீங்கள் பல இடங்களில் இரண்டு வெள்ளைக் குதிரைகள் ஒடுவது போன்ற புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதுபோல உங்கள் வீட்டிலும் வட கிழக்கு திசையில் இரண்டு வெள்ளைக் குதிரைகள் ஓடுவது போன்ற சிலையோ அல்லது படங்களையோ வைக்கும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள பண பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.

நம்மில் பலரும் இன்று வரைக்கும் வீட்டிலேயே உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவைகளை செய்யும் பழக்கம் கொண்டவர்கள். நீங்கள் வீட்டின் மொட்டை மாடியில், வீட்டின் நடுவில் நின்று, ஏன் உங்களது படுக்கை அறையில் கூட உடற்பயிற்சி செய்யலாம் அப்படி நீங்கள் உடற்பயிற்சியை செய்யும் போது வட கிழக்கு திசையை பார்த்தவாறு செய்யும்போது உங்களுக்கு ஆன்மீக சக்திகள் அதிகமாக கிடைக்கும். ஏனென்றால் வடகிழக்கு திசையில் தான் ஆன்மீக சக்திகள் அதிகமாக உலா வரும்.

-விளம்பரம்-

உங்களின் மனதை ஒருமுகப்படுத்தி புதிய புதிய சிந்தனைகளை படைப்பாற்றலையும் உங்களுக்கு ஏற்படுத்துவதற்காக உலகத்தின் அமைதியின் கடவுளாக போற்றப்படும் புத்தரின் திரு உருவ சிலையையோ அல்லது படங்களையும் வீட்டின் வட கிழக்கு திசையை பார்த்தால் போல் வைக்கலாம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here