இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். அது பணக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும், கெட்டவர்களாக இருந்தாலும் இப்படி அது யாராக இருந்தாலும் மரணத்தின் பிடியிலிருந்து அவர்கள் ஒரு போதும் தப்பிக்க இயலாது. ஒரு குழந்தை பிறக்கும் பொழுது இருந்து, எப்படி வாழ வேண்டும் என்றைக்கு அதன் முடிவு காலம் வரை அதன் தலை விதி எழுதப்பட்டுவிடும். மரணம் என்பது உங்களை நெருங்குவதற்கு முன்பாக சில அறிகுறிகளை உங்களுக்கு கொடுத்து விடும் என்பதை தேவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி மரணம் உங்களை நெருங்கும் போது என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இவையெல்லாம் மரணத்தின் அறிகுறிகள்
ஒருவர் தன்னைச்சுற்றி இருக்கும் திரிக்கப்பட்ட உருவங்களை பார்க்கும் பட்சத்தில் புராணங்கள் கூறுவது படி இன்னும் நான்கு மாதங்களில் அவர்கள் மரணித்து விடுவார்கள் என்று அர்த்தம்.
உங்களது தலையின் மீது கழுகு அல்லது காகம் அமர்ந்தாலும், இல்லை அது உங்களை உரசி விட்டு சென்றாலும். மரணம் உங்களை தொடர்ந்து வருகிறது நீங்கள் இன்னும் ஆறு மாதங்களில் இயற்கை எழுத உள்ளீர்கள் என்று அர்த்தம்.
விளக்கு அணையும் போது அதிலிருந்து வரும் ஒரு விதமான வாசனையை நுகர முடியாத ஒருவர் அதிக நாட்கள் உயிருடன் வாழ மாட்டார்கள். சில காலங்களிலேயே மரணிக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
யார் ஒருவரை மரணம் நெருங்குகிறதோ அவர்கள் சூரியனை பார்க்கும்போது சூரியனில் திரிக்கப்பட்ட ஒரு உருவம் தெரியுமாம். இப்படி சூரியனில் உருவத்தை பார்த்தவர்கள் 11 மாதங்களுக்குள் இயற்கை எழுதுவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.
மணலில் நீங்கள் நடக்கும் போது உங்கள் காலடியால் ஏற்ப்படும் பாதசுவடுகள் முழுமையாக பதியவில்லை என்றாலும் நீங்கள் இந்த பூமியை விட்டு விடை பெற போகிறீர்கள் என்று அர்த்தம். இன்னும் ஏழு மாதங்களுக்குள் உங்கள் உயிர் பிரிந்து விடும்.
மழை வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் ஒருவர் வானில் வரும் மின்னலை பார்க்கும் பொழுது அவர்கள் இன்னும இரண்டு மூன்று மாதங்களிலேயே மரணித்து விடுவார்கள் என்று தேவ சாஸ்திரங்கள் கூறுகின்றது.
வானில் தெரியும் துருவ நட்சத்திரங்களை யாரால் காண முடியவில்லை அவர்களின் உயிர் அவர் உடம்பை விட்டு பிரிய போகிறது என்று தேவ சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.
ஒருவர் குளிக்கும் போது குளித்து முடித்துவிட்டு சிறிது நேரத்திலேயே அவரது பாதம் வறட்சி ஆகிவிட்டால். இன்னும் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் பத்து நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று அர்த்தம்