பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் பாசிப்பருப்பை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். மலையாளிகள் கீர் போல இரண்டு வகையான இனிப்புகளை உருவாக்குகிறார்கள். அவைகள் பாயாசம் மற்றும் பிரதமன். பாயாசம் கீருடன் நிறைய பொருந்திப் போகும்.
இதன் அடிப்படை பால் மற்றும் சர்க்கரை. அதேசமயம் பிரதமனின் அடிப்படை தேங்காய் பால் மற்றும் வெல்லம். ஆக இது ஒரு நல்ல இனிப்பு. பிரதமனுக்கு பாசிப்பருப்பு தான் முக்கியம். இன்னொன்று தேங்காய்ப்பால். இதை கையால் பிழிந்து எடுப்பது தான் சிறந்தது என்று பெரும்பாலான சமையல் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இது சற்றே கடினமானது. ஆனால் ஃபைனல் அவுட் புட்டில் நமக்குக் கிடைக்கும் சுவை, அந்த கடினத்தை மறக்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமன் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக பாசிப்பருப்பு பிரதமன் ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அதே போல இந்த பாசிப்பருப்பு பிரதமன் நல்ல ஒரு சுவையைக் கொடுக்கும். இதை விசேஷ நாட்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். அல்லது உங்களுடைய முக்கியமான தினங்களில் செய்து கொடுத்து பாராட்டுகளை வாங்கலாம்.
பாசிப்பருப்பு பிரதமன் | Moong Dal Pradhaman Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- 1/4 கப் பால்
- 3/4 கப் நாட்டு சர்க்கரை
- 1 கப் தேங்காய் பால்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 2 டேபிள் ஸ்பூன் முந்திரி
செய்முறை
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இதனை தண்ணீர் விட்டு அலசி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் பால் சேர்த்து அதனுடன் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- பின் வேகவைத்த பாசிப்பருப்பில் கரைத்து வைத்த அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வேக வைக்கவும். பின் அத்துடன் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வறுத்து பிரதமனில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பிரதமன் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பாசிப்பருப்பு பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!