பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதிலும் இந்தப் புலாவ் வகைகளை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன. இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு காளான் புலாவ் செய்து கொடுங்கள். சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு காலை வேளையில் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், காளான் புலாவ் செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸியான காலை உணவாக இருக்கும். இந்த புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த காளான் புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக தயாரிக்கலாம். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இல்லையென்றால் இந்த காளான் புலாவுடன் சிக்கன் கிரேவி, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காளான் புலாவ் | Mushroom Pulao Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1 கப் பாசுமதி அரிசி
- 1 கப் புதினா
- 2 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 10 முந்திரி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 3 கிராம்பு
- 1 துண்டு பட்டை
- 1 பிரிஞ்சி இலை
- உப்பு தேவையான அளவு
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் காளானை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும் சீரகம், சோம்பு, கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பின் முந்திரி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், புதினா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை நன்கு கழுவி சேர்த்து விளையாட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பின் குக்கரை திறந்து நெய் மற்றும் புதினா இலைகள் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான காளான் புலாவ் தயார். இதனுடன் தயிர் பச்சடி, சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு பொரியல் வைத்து சாப்பிடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான காளான் பாஸ்தா சாஸ் இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி சுவை தான்!