நாம் எதற்காக சாப்பாட்டின் இறுதி பகுதியில் ரசம் ஊற்றி சாப்பிடுகிறோம் என்று தெரியுமா ? அதுவும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் வீடுகளில் ரசம் வைப்பது எதற்காக தெரியுமா ? சொல்கிறேன் சிக்கன் மட்டன் போன்ற கடினமான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது நாம் வயிற்றுப் பகுதியில் இந்த உணவுகள் செரிமானம் ஆகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் நாம் இது போன்ற கடினமான உணவுகளை சாப்பிட்ட பிறகு ரசம் ஊற்றி சாப்பிடும் பொழுது நமது வயிற்றுப் பகுதியில் நடைபெறும் செரிமான வேலை மிக எளிதில் முடிவடையும்.
இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?
செரிமான வேயையை எளிதாக்கும் சக்தி ரசத்திற்கு உண்டு. அதிலும் நாம் சாப்பிடும் ரசம் பல வகைகளில் தயார் செய்வார்கள், ஆனால் இன்று நாம் பாரம்பரிய முறைப்படி அடுப்பில்லாமல் பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க இருக்கிறோம். பொதுவா ரசம் அடுப்பில் வைத்து செய்வார்கள், இன்று அடுப்பில் வைக்காமல் மிகவும் சுவையான ரசம் செய்து பார்க்க போகிறோம். அதனால் இன்று பாரம்பரிய முறைப்படி பச்சைப்புளி ரசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பச்சை புளி ரசம் | Pachai Puli Rasam Recipe in Tamil
Equipment
- 1 குழம்பு பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 15 சின்ன வெங்காயம் நறுக்கியது
- 4 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய் நறுக்கியது
- 1 கொத்து கருவேப்பிலை நறுக்கியது
- 1 கொத்து கொத்தமல்லி நறுக்கியது
- 1 tbsp மிளகு
- 1 tbsp சீரகம்
- புளி எலுமிச்சை பழம் அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 கப் தண்ணீர்
செய்முறை
- முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் 15 நறுக்கிய சின்ன வெங்காய்ம், நான்கு பல் நறுக்கிய பூண்டு, நறுக்கிய மூன்று பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றில் ஒரு கொத்து நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- பின் ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு மிளகு இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து ஒன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சை அளவு புளியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பின் ஊற வைத்த புளியை கரைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும்.
- பின்பு நாம் தயார் செய்த புளி கரைசலை வடிகட்டி அகல பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு ரசத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- பின் கைகளால் ஒரு முறை ரசத்தில் நாம் சேர்த்த மிளகாய் கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை பிசைந்து விடவும் அவ்வளவுதான் நமது பாரம்பரிய பச்சைப்புளி ரசம் இனிதே தயாராகிவிட்டது.