ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான பூண்டு கார சேவு இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ஸ்நாக்ஸ் ரெடி!!

- Advertisement -

உங்களுக்கு காரா சேவ் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது போன்று வீட்டிலேயே பூண்டு காரா சேவ் செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கிலாம் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
poondu karasev
Print
5 from 1 vote

பூண்டு காரா சேவ் | Poondu Karasev Recipe In Tamil

உங்களுக்கு காரா சேவ் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது போன்று வீட்டிலேயே பூண்டு காரா சேவ் செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கிலாம் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: poondu karasev, பூண்டு கார சேவு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 12 பூண்டு
  • 2 கப் கடலை மாவு
  • 1 கப் அரிசி மாவு
  • 1 கப் பொட்டு கடலை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • கப் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் உப்பு

செய்முறை

  • முதலில் கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சலித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
  • அடுத்து மிக்ஸியில் பூண்டு பற்கள், மிளகாய் தூள், உப்பு மூன்றையும் ஒன்றாக போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் சலித்த கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுகடலை மாவு ஆகியவற்றை போட்டு அதனுடன் அரைத்த விழுதை போடவும். அதில் அரை கப் தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.
  • பிசைந்த பிறகு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். மாவை பிசைந்த பிறகு காரசேவு கரண்டியில், ஒரு முறை தேய்த்து பார்க்கவும்.
  • அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிலிருந்து ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெயை எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் ஊற்றி ஒரு முறை நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் காரசேவு கரண்டியை எண்ணெயின் மேல் புறம் பிடித்து கொண்டு அதில் மாவை வைத்து உள்ளங்கைகளால் அலுத்தி தேய்த்து விடவும்.
  • கம்பி போல் விழ வேண்டும். பின்னர் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு எண்ணெய் சத்தம் அடங்கி, பொன்னிறமாக ஆனதும் எடுத்து விடவும்.
  • பிறகு கார சேவை எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் எண்ணெய் வடிகட்டியை வைத்து அதில் போடவும். எண்ணெய் வடிந்ததும் எடுத்து விடவும்.