புனித வெள்ளி கொண்டாடப்படுவதற்கான உண்மை காரணம் என்னனு தெரியுமா ?

- Advertisement -

கிறிஸ்தவ பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் அதேபோல் வருட வருடம் வரும் புனித வெள்ளி எல்லா ஆண்டுகளும் ஒரே நாளில் வருவதில்லை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாளில் புனித வெள்ளி கொண்டாடப்படும்.வசந்த உத்தராயணத்தின் முதல் முழு நிலவுக்குப் பிறகு முதல் வெள்ளிக்கிழமை அன்று புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது.

-விளம்பரம்-

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள்

இந்த 2024 வது வருடம் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளியில் புனிதம் என்ற வார்த்தை உள்ளதால் நாளை மிகவும் புனித நாள் இன்று சிலர் நினைப்பதுண்டு ஆனால் இந்த நாளானது ஒரு துக்க நாள். அதனால் கத்தோலிக்கர்கள் இறைச்சி எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். செய்த பாவங்களை எல்லாம் நீக்குவதற்காக இயேசு கிறிஸ்து தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட நாள்தான் இந்த புனித வெள்ளி.

- Advertisement -

இந்த நாள் அன்று தான் இயேசு கிறிஸ்து உயர்நீத்ததாக கூறப்படுகிறது எனவே பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் தன்னைத்தானே அறிந்து கொண்டதால் அந்த நாளன்று இனிமேல் பாவங்களை செய்யப்போவதில்லை என்று உறுதி ஏற்றுக் கொண்டார்கள் கத்தோலிக்கர்கள். அதனால்தான் புனித வெள்ளி என்று இறைச்சியை சாப்பிடாமல் இருக்கிறார்கள். இயேசு உயிர் துறந்த நாள் புனித வெள்ளி எனவே தேவாலயங்களில் துக்கமான பாடல்கள் மட்டுமே ஒலிக்கப்படும்.

ஈஸ்டர் நாள்

கத்தோலிக்கர்கள் குறிப்பாக இந்த நாளன்று உணவு எதுவும் உண்ணாமல் முழுவதுமாக விரதம் இருந்து தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வார்கள். தெய்வாளியங்களில் அன்று உண்பதற்காக வழங்கப்படும் திவ்யா நற்கருணை இயேசுவின் உயிர் நீத்ததை உணர்த்தும் விதமாக அனைத்தும் துணியால் மூடப்படும். இயேசு கிறிஸ்து உயிர் நீத்ததாக கருதப்படும் நாளில் இருந்து மூன்றாவது நாள் திவ்ய நற்கருணை மீதுள்ள துணி விலக்கப்பட்டு ஈஸ்டர் தினம் கொண்டாடப்படும்

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை என்பதால் வெளியில் புனித வெள்ளியும் ஞாயிற்றுக்கிழமை மறுபடியும் உயிர்த்து எழுந்ததால் அந்த நாளில் ஈஸ்டர் தினமும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வெள்ளிகிழமை காலை 6-7 மணிக்குள் இதை மட்டும் செய்யுங்கள்! பண புழக்கம் வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்கும்!