வெள்ளிகிழமை காலை 6-7 மணிக்குள் இதை மட்டும் செய்யுங்கள்! பண புழக்கம் வீட்டில் அதிகரித்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

பொதுவாக நாம் நலமுடன் வாழ்வதற்காக எவ்வளவோ விஷயங்களையும் செய்து வந்தாலும் நம்மை தொடரும் கெட்ட சக்திகள் துரதிஷ்ட சக்திகள் போன்றவை நம்மை ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியாத அளவிற்கு பிரச்சனை மேல் பிரச்சனை நமக்கு தந்து கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் கெட்ட எண்ணங்கள், துர் சக்திகள் நம் பக்கமே தலை வைத்து படுக்க முடியாத அளவிற்கு சில ஆன்மீக ரீதியான விஷயங்களை நீங்கள் செய்யும் போது இது போன்ற பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு வரலாம் ஏன் உங்கள் வீட்டில் பணம் கூட சேர்ந்து கொண்டிருக்கும் உங்கள் வீட்டில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த வழிமுறைகளை நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

உப்பு வாங்குங்கள்

முதலில் நம் வீட்டையும் நம்மையும் கெட்ட எண்ணங்கள், துர் சக்திகள் போன்றவை நெருங்காமல் இருப்பதற்காக நமது வீட்டில் நிலை வாசலில் மருதாணி இலை கொத்தை கட்டி தொங்க விட வேண்டும். பின்பு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் 6:00 மணியில் இருந்து 7.00 மணிக்குள் சுத்த பத்தமாக குளித்து உங்கள் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து பின்பு மகாலட்சுமி தயாராக வேண்டி கல்லுப்பு வாங்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். இந்த முறையை நீங்கள் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை செய்து வரும் பொழுது உங்கள் வீட்டின் பணப்புழக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

பண மழை கொட்ட வேண்டுமா

ஒரு 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஐந்து எடுத்துக் கொண்டு அனைத்தையும் உங்கள் பூஜை அறையில் வைத்து பூஜை செய்து. அதன் பின் ஒரு தாளில் மடித்து தனியாக ஒரு உண்டியலில் போட்டு வைக்க வேண்டும். இந்த முறையை 14 வாரங்கள் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியில் இருந்து ஏழு மணிக்குள் செய்து வாருங்கள். 14 வாரங்கள் முடிந்தவுடன் நீங்கள் 14 வாரங்கள் போட்ட வெற்றிலை பாக்கு ஆகியவற்றை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒடும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த நாணயங்களை உங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி வையுங்கள் உங்கள் வீட்டில் பணம் மழை கொட்டிக் கொண்டே இருக்கும்.

பண பிரச்சனை சரியாக

உங்களுக்கு பண பிரச்சனை அதிகமாக இருக்கிறது கடன் மேல் கடன் வாங்கி உள்ளீர்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பொழுது கூட வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை என்று அன்னதானம் செய்து பாருங்கள். இதை நீங்கள் ஒவ்வொரு மாதமும் மறக்காமல் செய்யும்போது உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் தீரும் மேலும் உங்கள் வீட்டில் பணம் தேவையில்லாமல் செலவாகிக் கொண்டே இருக்கும் பட்சத்தில் தினமும் காலை எழுந்தவுடன் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் வாங்கி போடுங்கள். இதனால் உங்கள் வீட்டில் வீண் செலவாகும் பணம் தடுக்கப்படும்.

உடல் நல கோளாறுகள் சரியாக

மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து உடல் நல கோறுகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் என்றால் இதை செய்யலாம். அதாவது ஒருவர் உடல் நலம் சரியான உடன் மற்றொருவர்க்கு நலம் சரியில்லாமல் செல்லும். இது போன்ற உடல் நல கோளாறுகள் தொடர்ந்து நடக்கும் பொழுது உங்கள் வீட்டின் அருகில் உள்ள கோவில் சென்று மஞ்சள் பரங்கிக்காயை தானம் செய்ய வேண்டும் நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள் உங்களுக்கும் நல்ல பலன்களை கிடைக்கும்.

-விளம்பரம்-