செய்முறை விளக்கம்:
செய்முறை 1: முல்தானி மெட்டி + வேப்பிலை பொடி
முதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும். பின்பு அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு வேப்பிலை பொடியை சேர்க்கவும்.
செய்முறை 2: துளசி பொடி
பிறகு அதனுடன் துளசி பொடி 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.இந்த போட்டியானது அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
செய்முறை 3: ரோஸ் வாட்டர்
அடுத்து அந்த மூன்று பொடிகளுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
செய்முறை 4: பேஸ்ட்
பிறகு தண்ணீரால் முகத்தை கழுவிய பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். தடவிய பிறகு 10 நிமிடம் காயா விடவேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.
செய்முறை 5:
இந்த மாரி வாரத்தில் 2 அல்லது 3 முறை முகத்தில் இந்த பேஸ்டை தடவி வந்தால் முகம் வேலையாக மாறும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்புக்கள் மற்றும் நன்மைகள்:
குறிப்பு 1: முல்தானி மெட்டி சருமத்தை சுத்தப்படுத்தி,தெளிவடைய செய்கிறது.இது ஒரு வகை களிமண் ஆகும். முல்தானி மெட்டியில் மக்னீஷியம்,இரும்பு,கால்சியம், போன்றவற்றை பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இதனால்
நம் சருமத்தில் உள்ள பருக்களையும்,முகத்தில் உள்ள கசடுகளையும் நீக்குகிறது.குறிப்பு 2: வேப்பிலை பொடி வீட்டில் சுலபமாக தயாரிக்கக்கூடிய ஒன்றாகும்.இது உடல்,கூந்தல்,சருமம் அனைத்துக்கும் நன்மை செய்ய கூடியது.
குறிப்பு 3: துளசி பொடி நம் சருமத்தில் உள்ள கறைகளை
நீக்கும். துளசி போட்டியானது அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இல்லையெனில் துளசி இலைகளை பறித்து அதனை நன்றாக காயவைத்து மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளலாம். தேவை படும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.குறிப்பு 4: ரோஸ் வாட்டர் நம்முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்கும்
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…