குறுகிய காலத்தில் விற்க முடியாமல் இருக்கும் உங்களின் வீடு, நிலத்தை விற்க இதை செய்யுங்கள்!

- Advertisement -

நாம் என்னதான் பார்த்து பார்த்து வீடு கட்டி இருந்தாலும் சில சமயங்களில் நாம் கட்டிய வீட்டையே நம் மனம் இல்லாமல் விற்க வேண்டிய சூழ்நிலைகள் கூட ஏற்படலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கும் ஆனால் முக்கிய காரணமாக நமக்கு ஏதேனும் பெரிய பண தேவையாக தான் இருக்கும். அதன் காரணமாக நம் கட்டிய வீட்டை நாமே விற்பதற்கு ஆயத்தமாகி விடுவோம். இருந்தாலும் ஒரு வீட்டை கட்டுவது எப்படி எளிதான காரியம் கிடையாதோ அதை போல் அந்த வீட்டை விற்பதும் எளிதாக இருக்காது. அந்த வீட்டை விற்று பணத்தை நாம் வாங்குவதற்குள் ஒரு வழியாக ஆகிவிடுவோம். அதனால் வீடு, நிலம் விற்பனை செய்வதற்கு ஆன்மீகத்தின் படி ஒரு சில பரிகாரங்கள் உள்ளது அதை நாம் இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நம் வீட்டை அவசரமாக விற்பதற்கு முற்படும்போது ஒன்று வீட்டை வாங்குவதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள், வீட்டை வாங்க ஆட்கள் கிடைத்தாலும் நமக்கு தேவையான லாபம் கிடைக்காது. இது இரண்டும் கிடைத்து குறிய காலத்தில் நாம் வீட்டை விற்பதற்காக விஷ்ணு பகவானின் மூன்றாவது அவதாரமான வராக பெருமாளை வழிபட்டு வந்தால் நிலம் சார்ந்த வீட்டுப் பிரச்சினைகள் வீடு விற்பது போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.

- Advertisement -

பரிகாரத்தை சொல்வதற்கு முன் உங்களுக்கு ஒரு சிறு கதையை ஞாபகப்படுத்துகிறேன். விஷ்ணு பகவானின் மூன்றாவது அவதாரமான வராக பெருமாள் அவதாரம் ஒரு பன்றி அவதாரமாகும். நீங்கள் இன்றைக்கும் பல சிலைகளை பார்த்திருப்பீர்கள் பன்றி உருவம் எடுத்த வராக பெருமான் சுற்றிக் கொண்டிருக்கும் பூமியை தன் தலையினால் தாங்கி பிடிப்பது போன்ற சிலைகளை நீங்கள் நிறை பார்த்திருப்பீர்கள்.

ஆம் புராண கால கதைகளின்படி இரணியன் தம்பி இரண்யாட்சன் எனும் கொடூர அரக்கன் நம்முடைய பூமி கைப்பற்றி சமுத்திரத்தின் அடியில் அடைத்து வைத்திருந்தான். அப்படி அந்த அசுரனிடம் இருந்து நம் பூமியை காப்பாற்றுவதற்காக விஷ்ணு பகவானே வராக பெருமாள் எனும் பன்றி அவதாரம் எடுத்து இரணியனிடம் இருந்து பூமியை மீட்டெடுத்து காப்பாற்றினார். அதனால் பூமியவே கைப்பற்றி மீட்டெடுத்த வராக பெருமானை நம் வழிபடும் பொழுது நிலம் சார்ந்த வீட்டுப் பிரச்சினைகள் தீரும்.

அதனால் நீங்கள் விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலமோ அல்லது வீட்டின் ஒரு கைப்பிடி அளவு மண்ணை வெள்ளிக்கிழமை அன்று எடுத்து ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு முடிந்து கொள்ளுங்கள். அதன் பின்பு வராக பெருமானின் கோவிலுக்கு சென்று அவர்களுடைய பாதத்தில் நாம் எடுத்து வந்த மண்ணை வைத்து “எங்களுடைய வீட்டை நல்ல லாபத்திற்கு குறிய காலத்தில் விற்று முடிக்க வேண்டும் என மனம் உருகி வராகப் பெருமானை வேண்டி கொள்ளுங்கள்”.

-விளம்பரம்-

பின்பு வராக பெருமான் கோவிலில் உங்களால் முடிந்த கைங்கரியம் மற்றும் சிறு உதவிகளை செய்து விட்டு வாருங்கள். பின் நீங்கள் எடுத்து வந்த மண்ணை திரும்பவும் உங்கள் நிலத்தின் அல்லது வீட்டிலேயே சேர்த்து விடுங்கள். இப்படியாக தொடர்ந்து மூன்று வாரம் வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தாரல் மிகவும் குறுகிய காலத்தில் அதாவது 90 நாட்களுக்குள் உங்களின் விற்க முடியால் கஷ்டப்படும் வீடு அல்லது நிலத்தையோ வேகமாக நல்ல லாபத்திற்கு விற்பதற்கு வராக பெருமான் உதவி செய்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here