Home ஆன்மிகம் வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது எனவே ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் ஆனால் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம்மிடம் பணம் தங்குவதை கிடையாது ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும் முக்கியமாக அனைவரும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு பணம் அதிகமாக சேமித்து வைக்க பலவிதமான எளிமையான பரிகாரங்கள் உண்டு. அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து நிதி பிரச்சனைகளும் தீர்ந்து பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய ஒரு எளிமையான விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பணத்தை கொடுக்கும் குப்பைமேனி வேர்

பொதுவாக ஒவ்வொரு மூலிகை செடிக்கும் ஒவ்வொரு விதமான குணங்களும் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளும் உண்டு அந்த வகையில் குப்பைமேனி செடி மருத்துவ குணங்கள் வாய்ந்தது சித்தர்கள் காலத்தில் இருந்து பலவிதமான நோய்களுக்கு மருந்தாக இந்த குப்பைமேனி செடி பயன்படுத்தப்பட்டு வந்தது அந்த வகையில் இந்த குப்பைமேனி செடியின் வேர் நம் வீட்டில் இருந்தால் நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.

குப்பைமேனி செடியின் வேரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டிய நேரம்

இந்த குப்பைமேனி செடி நமக்கு பல்வேறு இடங்களில் கிடைக்கும் ஏன் நம் வீட்டில் கூட இந்த குப்பைமேனி செடி இருக்கும் ஆனால் இந்த குப்பைமேனி செடியின் வேர் நம் வீட்டிற்கு பணத்தை கொடுக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது அந்த வகையில் இந்த குப்பைமேனி செடியின் வேரை நம் வீட்டில் பணம் புழங்குகின்ற இடத்தில் வைத்தால் பணம் அதிகரிக்கும். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இந்த குப்பைமேனி செடியின் வேரை வியாழக்கிழமைகள் குரு ஹோரையான காலை 6 மணி முதல் 7:00 மணி வரை மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மட்டுமே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும் மாலை குரு ஹோரையில் குப்பைமேனி செடியின் வேரை எடுக்கக் கூடாது பொதுவாகவே 6 மணிக்கு மேல் எந்த ஒரு செடியையும் நாம் தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அந்த வகையில் காலை மற்றும் மதிய நேரங்களில் வரக்கூடிய குரு ஹோரையில் மட்டுமே இந்த குப்பைமேனி செடியை நாம் எடுக்க வேண்டும்.

குப்பைமேனி செடியின் வேரை வைக்க வேண்டிய இடம்

இந்த குப்பைமேனி செடியை நாம் எடுக்கும் போது ” நசி நசி மூலிகை சாபம் நசி” என்று சொல்லிக் கொண்டே தான் குப்பைமேனி செடியை நாம் பறிக்க வேண்டும். வீட்டுக்கு கொண்டு வந்த மஞ்சள் தண்ணீரில் நன்றாக அபிஷேகம் செய்துவிட்டு அதனை காய வைத்து அதற்கு கற்பூர தீபம் தூபம் காட்டி பூஜை அறையிலோ பணம் வைக்கின்ற பீரோக்குள்ளோ பர்ஸ்குள்ளோ எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

அப்படி வைக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். ஒரு மாத காலத்திற்கு அதனை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு ஒரு மாதத்திற்கு பிறகு அதனை மற்றவர்கள் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும் மறுபடியும் ஒரு குப்பைமேனைச் செடியை பறித்தோம் அல்லது நாட்டு மருந்து கடைகளில் வாங்கியோ அபிஷேகம் செய்த தீப தூபம் காட்டி அந்த இடத்தில் வைத்து விட வேண்டும் இப்படி செய்து கொண்டே இருந்தால் வீட்டில் பொருளாதார நிலைமை மாறுவது தெரியும் மேலும் வீட்டில் நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும் முழு மனதோடு இதனை செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா! இந்த ஒரே ஒரு தீபம் போதும்!