நிரந்தரமாக கைநிறைய சம்பளத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்க முருகரை இப்படி வழிப்பட்டு வந்தாலே போதும்!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. எனவே உங்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தால் அதை மன நிறைவோடு பத்திரமாக பார்த்து நல்ல முறையில் வேளை பாருங்கள்.

-விளம்பரம்-

கிடைத்த வேலையை மனதார திருப்தியாக நேர்மையான முறையில் செய்தால் கூடிய விரைவில் உங்களுக்கான நியாயமான வருமானம் உங்களுக்கு கிடைத்தே தீரும். அப்படி நியாயமான வருமானம் நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்தால் வேறு வழியே இல்லை நீங்கள் வேலையை மாற்றி தான் ஆக வேண்டும். அதற்காக நீங்கள் உயர்ந்த சம்பளத்தில் வேறு வேலையை தேடி கொள்ளுங்கள். வேலையில் நீண்ட அழுத்தம் உள்ளது என்பதற்காக அடிக்கடி மாற்றுவது மிகவும் தவறு உண்மையாகவே வருமானத்திற்காக நீங்கள் மாற்றினால் அது சிறந்தது இல்லையெனில் எதிர்காலத்தில் அது பிரச்சினையாக வரக்கூடும். உங்களுக்கு சரியான வேலையே கிடைக்கவில்லை என்றால் அப்பொழுது நல்ல வருமானத்தில் நல்ல உத்தியோகம் கிடைக்க நிரந்தரமாக அந்த உத்தியோகம் நிலைக்க முருகரை வழிபாடு செய்யலாம். அந்த எளிமையான முருகர் வழிபாடு எப்படி செய்வது என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

- Advertisement -

முருகரை வழிபடும் முறை

பொதுவாக அனைவரது வீட்டிலும் முருகர் படம் இருக்கும். அந்த முருகர் படத்திற்கு முன்பாக ஒரு பித்தளை தாம்பூல தட்டை வைத்து அதில் துவரம் பருப்பை நிரப்பி, அதன் மேல் இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்து சிவப்பு நிற திரி போட்டு விளக்கேற்றி ‘முருகா எனக்கு வேலை கொடு’ என்று மனதார முருகரை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று செய்யலாம்.

செவ்வாய் ஹோரையில் முருகர் பாதங்களில் விழுந்து வழங்கினால் நல்ல வேலை கிடைக்கும் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் காலை 6:00 மணியிலிருந்து 7:00, மதியம் 1:00 மணியிலிருந்து 2:00, இரவு 8:00 மணியிலிருந்து 9:00. இந்த மூன்று நேரங்களில் உங்களுக்கு ஏதுவான நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை மனதார செய்யும் பொழுது வேளை சம்பந்தமாக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.இந்த வழிபாடு செய்து முடித்த அடுத்த நாளான புதன்கிழமை அன்று அந்த தாம்பூல தட்டில் வைத்த துவரம் பருப்பை எடுத்து உங்கள் வீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக அதில் சிறிதளவு பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அதனை மாட்டிற்கு அல்லது பறவைகளுக்கும் கொடுத்தால் மிகவும் நல்லது.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?

தனியார் உத்தியோகம் மட்டுமில்லாமல் அரசு உத்தியோகத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கும் இந்த வழிபாடு கை கொடுக்கும். இந்த வழிபாடு செய்து முடித்த பிறகு நீங்கள் ஏதாவது ஒரு அரசு தேர்வில் எழுதினால் நிச்சயமாக நன்மையே நடக்கும். அதனால் நம்பிக்கையோடு மனதார இந்த வழிபாட்டை செய்து ஒரு நிரந்தரமான உத்தியோகத்தை பெறுங்கள்.