தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமடைந்து இருக்கிறது. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன.
இதனையும் படியுங்கள் : பூ போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!
ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள அவல் இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். இந்த அவல் இடியாப்பத்தை காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ அல்லது டிஃபினாகவோ சாப்பிடலாம்.
அவல் இடியாப்பம் | Aval Idiyappam
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 இட்லி பாத்திரம்
- 1 இடியாம்பம் பிழியும் இயந்திரம்
தேவையான பொருட்கள்
- 5 கப் அவல்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 கப் தேங்காய்
- உப்பு தேவையானஅளவு
- சர்க்கரை தேவையானஅளவு
செய்முறை
- முதலில் பெரிய துளை உள்ள சல்லடையில் அவல் சேர்த்து லேசாக சலித்து கொள்ளவும்.
- பின் வெறும் வாணலியில் அவல் சேர்த்து கைகளால் அழுத்திப் பார்த்தால் நொடியும் அளவிற்கு கலர் மாறாமல் வறுக்கவும்.
- பின் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி மையாக அரைக்கவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1கப் தண்ணீர் வீதம் 4.5கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
- பின்னர் வேகவைத்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி குளிர் நீரில் கைகளை நனைத்து நன்றாக அழுத்தி உருண்டை பிடிக்கவும்.
- இனி ஒவ்வொரு உருண்டைகளாக இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. எப்பொழுதும் போல் தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.