- Prep
- 8h 15m
- Cook
- 10 min
- Total
- 8h 25m
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி காஞ்சிபுரம் இட்லி என்பது பிரபலமான காஞ்சிபுரம் இட்லி செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்
இதையும் படியுங்கள்: நாவில் எச்சி ஊறும் இட்லி ஃப்ரை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான காஞ்சிபுரம் இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Ingredients
Method
காஞ்சிபுரம் இட்லி செய்ய முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, ஆகியவற்றை நன்றாக கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும் இல்லை என்றால் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய்,நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
ஊற வைத்த அரிசி பருப்பை மிக்ஸி ஜாரில் அல்லது கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை 8 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.மாவில் தாளித்தவற்றை சேர்க்க வேண்டும்.
பெருங்காயத்தூள், சுக்குத்தூள் சேர்க்க வேண்டும்.இட்லி பானையில் ஒரு சிறிய டம்ளரில் அல்லது கிண்ணத்தில் மாவை ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
மாவு இட்லி பானையில் வேக வைப்பதற்கு முன்பாக டம்ளரில் சிறிது நெய்யை தடவி மாவை சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.






