இந்த பூலோகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் பிறந்து இறக்கும் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பலவிதமான துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்து இருப்பார்கள். அப்படி அவர்கள் மனதை பாதிக்கும் வகையில் கஷ்டங்களும் துன்பங்களும் வரும்பொழுது அவர்கள் மன நிம்மதியை தேடி செல்லும் ஒரை இடம் கோவில் தான். என்னதான் கோவில்களுக்கு சென்று கடவுளுக்கு பூஜை செய்து நம் வேண்டுதல்களை அவரிடம் கூறிவிட்டு வந்தாலும். கடவுள் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறாரோ இல்லையோ நம் கோவிலுக்கு சென்று வரும் பொழுது நம் மனதிற்கு ஒரு தெளிவு பிறக்கிறது, மன அமைதி கிடைக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகவே பலர் கோவிலுக்கு செல்கின்றனர். இப்படி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவர்களை அறியாமலும் செய்யும் சிறு சிறு தவறுகளை பற்றி தான் இந்த ஆன்மீக தொகுப்பில் நாம் காண போகிறோம்.
கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கோவிலின் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் படியை தாண்டியும் அல்லது அதனை மீது ஏறி நிற்கவோ கூடாது. கோவிலுக்கு உள்ளே செல்வதற்கு முன் அந்தப் படியை கைகளால் தொட்டு கும்பிட்டு விட்டு பின் அதை தாண்டி கோவிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
நாம் கோவில்களுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு தான் வர வேண்டும். ஆனால் விஷ்ணு கோவில்களுக்கு செல்லும் பொழுது மட்டும் விஷ்ணுவை தரிசனம் செய்துவிட்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் ஏனென்றால் விஷ்ணு பகவானின் மனைவி மகாலட்சுமி நம்முடனே வீட்டுக்கு வருவாள்.
கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் கடவுளின் சிலையை கைகளால் தொட்டு வணங்க கூடாது. கடவுளின் சன்னிதானத்திற்கு முன் நின்று ஒவ்வொரு கடவுளையும் எப்படி வணங்க வேண்டுமோ அது போல தான் வணங்க வேண்டும். கடவுளின் சிலையை தொட்டு வணங்குவது தவறான செயலாகும்.நாம் கோவிலுக்கு சென்று
வீட்டில் இருப்பவர்களின் பெயரில் அபிஷேகம், அர்ச்சனை செய்யும் போது. அதே நேரம் அவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அது மிகவும் ஒரு தவறான செயலாகும்.பக்தர்கள் கடவுளை தரிசனம் செய்த பின் பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விளக்கு ஏற்றபவார்கள். அப்படி விளக்கு ஏற்றுபவர்கள் கடவுளின் சிலையில் படுமாறு ஏற்றக்கூடாது. அது போல் கண்ட இடங்களிலும் விளக்கு ஏற்ற கூடாது. விளக்கு ஏற்றுதற்காக இருக்கும் இடத்தில் மட்டுமே விளக்கு ஏற்ற வேண்டும்.
நம் ஏற்றும் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதற்குள் இருக்கும் எண்ணெயை கைகளால் தொடக்கூடாது, தொட்டு தலையில் வைப்பது என்பதும் மிகவும் தவறான செயலாகும்.
கோவிலுக்கு கடவுளை தரிசனம் செய்ய செல்பவர்கள். அவர்கள் முதலில் தங்கள் வீட்டின் வாசலை கூட்டி, தெளித்து கோலமிட்டு பின் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு அதன் பின் தான் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்ய வேண்டும்.
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…
மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…
இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…