பொய் சொல்லக்கூடாது ஏமாற்றக்கூடாது என திருக்குறளில் பல்வேறு குரள்களை எழுதியது நம் முன்னோர் ஆனா திருவள்ளுவர் தான். அதே முன்னோர்கள் தான் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் ஒரு திருமணத்தினால் ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் கெட்டவனாக இருந்தால் கூட நல்லவனாக மாறி விடுவான் என திருமணத்தின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இருந்தாலும் தனக்கு வரபோகும் மனைவி அழகாக இருக்க வேண்டும் என அனைத்து ஆண்களும் எதிர் பார்ப்பதில்லை.
தனக்கு வரும் மனைவி தன்னையும், தன் குடும்பத்தையும் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து குடும்ப வாழ்க்கை வரை விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயத்தில் விட்டுக் கொடுத்து தனது வாழ்க்கையை அழகாக மாற்றுபவளாக இருந்தால் மட்டும் போதும் என்று தான் நினைப்பான். அப்படி திருமணம் பொருத்தம் பார்க்கும் போது இந்த ராசிக்கு இந்த ராசி பொருத்தமாக இருக்குமா என்று பார்ப்பார்கள் அப்படி நான் சொல்லும் இந்த மூன்று ராசிக்கார பெண்களை நீங்கள் திருமணம் செய்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகாக மாறிவிடும் அது என்னென்ன ராசி என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆட்சி செய்யப்படுவார்கள். இந்த சிம்ம ராசிக்கார பெண்கள் அடுத்தவர்களை ஈர்ப்பதையை தனி சிறப்பாக கொண்டு உள்ளவர்கள். மேலும் இவர்களிடம் லட்சியவாதியான படைப்புத்திறன் நிறைந்து காணப்படும். திருமண வாழ்க்கையை பொறுத்தவரை கோபக்கார ஆண்களுக்கு சிறந்த மனைவியாக இந்த சிம்ம ராசிக்கார பெண்கள் இருப்பார்கள். இவர்களின் முக்கியமான தனி சிறப்பே குடும்பத்தில் எப்பேர்ப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் அதை லாபகரமாக சமாளித்து விடுவார்கள்.
மேஷம் ராசி
மேஷம் ராசிகாரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆட்சி செய்யப்படுபவர்கள். இந்த மேஷ ராசி உடைய பெண்கள் ஆற்றல் திறன் நிறைந்தவர்களாகவும் எப்போதும் சுறுசுறுப்பு தன்மை உடன் இருப்பார்கள். மேலும் இந்த மேஷ ராசிக்கார பெண்கள் தங்களின் வசீகரம் மற்றும் அன்பினால் அனைவரையுமே எளிதில் கவர்ந்து விடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் தனக்கு வரும் ஆண்மகன் தனக்கு நிகரானவனாக இருந்தால் மட்டுமே தேர்வு செய்வார்கள். அப்படி மேஷ ராசிக்கார பெண்களை திருமணம் செய்யும்போது கணவனை விட்டுக் கொடுக்காமல் பொதுவாழ்வுடன், இல்லற வாழ்வையும் சேர்த்து ஒரு சேர வழிநடத்தி தனது கடைசி காலம் வரை கணவனை தாங்க தாங்கு என்று தாங்குவார்கள்.
கடக ராசி
கடக ராசி கார பெண்கள் குடும்பத்தின் மீது பேரன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசி பெண்கள் உங்கள் தாயிடம் இருக்கும் அன்பு போலவே அவர்களிடமிருந்து அதை தாய்க்குரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் இந்த கடக ராசி பெண்கள் திருமண பந்தத்திற்கு மிகவும் சிறந்தவர்கள் ஆவார்கள். ஆயுள்காலம் முழுவதும் தன்னை பாதுகாத்து பக்கபலமாக நிற்கும் ஆண்களையை இவர்கள் திருமணம் செய்ய விரும்புவார்கள். அவர்களின் பிறவி காலம் முடியும் வரை கைப்பிடித்தவனை கைவிடாத பண்பு கொண்டவர்கள்.