Home ஆன்மிகம் கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!

கடன் தொல்லைகள் நீங்கி வருமானம் பெருக வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போது!

இந்த உலகில் உள்ள அனைவருக்குமே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பணம் மட்டும்தான். பணம் இல்லாவிட்டால் இந்த உலகில் யாராலும் வாழவே முடியாது. நாம் என்னதான் உழைத்து பணத்தை சேமித்துக் கொண்டிருந்தாலும் நம் கையில் பணம் நிலைக்கவே நிலைக்காது ஆனால் அனைவருக்கும் பணம் நம்மை தேடி வந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கடன் பிரச்சனையால் இன்னும் பல பிரச்சினைகள் நமக்கு வந்து கொண்டே தான் இருக்கும் கடன் கொடுத்தவர்களும் சரி கடன் வாங்கியவர்களும் சரி அனைவருக்கும் பணத்தால் பிரச்சனைகளே இருக்கும் ஆனால் இந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நம் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழ முன்னோர்கள் பலவிதமான வழிகளை நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துகின்ற அல்லது வீட்டில் இருக்கின்ற சில பொருட்கள் தெய்வீக சக்தியையும் பணத்தையும் இருக்கக்கூடிய தன்மை வாய்ந்தது. முன்னோர்கள் சொல்கின்றபடி நாம் வீட்டில் சில பொருட்களை வாங்கி வைப்பதன் மூலமாகவும் அல்லது சில வழிபாடுகளை செய்வதன் மூலமாகவும் நம்முடைய கடன் பிரச்சினைகள் தீர்ந்து போகும்.எனவே அப்படி பணத்தை ஈர்த்து கொடுக்கக்கூடிய வீட்டில் உள்ள ஒரு பொருளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெட்டிவேர்

நறுமணத்திற்காகவும் மருந்து பொருளாகவும் பொருளாதார பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பொருளாகவும் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் இருந்தேன் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் தான் வெட்டிவேர். வெட்டிவேரை மருத்துவத்திற்காக மட்டுமில்லாமல் ஆன்மீகத்திலும் வாஸ்து சாஸ்திரத்தின்படியும் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். நாமும் அதே போல் வெட்டிவேரை பொருளாதார பிரச்சனைகளுக்காக பயன்படுத்தி வரலாம். வெட்டிவேரை வீட்டில் வைப்பதன் மூலமும் பூஜை அறையில் வைப்பதன் மூலமும் தெய்வீக சக்தியும் நறுமணமும் நம் வீட்டை சுற்றி வரும். விளக்கேற்றும் திரியுடன் வெட்டிவேரை சேர்த்து தினமும் விளக்கு ஏற்றி வந்தால் நாம் எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்று சொல்லப்படுகிறது.

வெட்டிவேரால் செய்யப்பட்ட மாலையை வீட்டில் வாசலில் தொங்கவிட்டால் துர் சக்திகள் எதிர்மறையாற்றல்கள் என எதுவுமே வீட்டுக்குள் அண்டாது. மகாலட்சுமி தேவிக்கு உகந்த பொருள் வெட்டிவேர் அதனால் வெட்டி வேறாலான மாலையை வீட்டில் உள்ள சாமி படங்களுக்கும் நம் முன்னோர்களின் படங்களுக்கும் அணிவிக்கலாம். வெட்டிவேரை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் உள்ள கடன் பிரச்சினைகள் மன கஷ்டங்கள் சண்டைகள் சச்சரவுகள் என அனைத்துமே நீங்கும்.

வெற்றியை தரும் வெட்டிவேர்

விநாயகருக்கும் மகாலட்சுமி தேவிக்கும் வெட்டிவேர் உகந்த ஒரு பொருள். வெட்டிவேர் என்பது வெற்றியை தரும் வேர் என்பதை குறிக்கும். எனவே வெட்டிவேர் நம் வீட்டில் இருப்பதால் நாம் தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும். குறிப்பாக வெட்டிவேரை சாமி படங்களுக்கு அணிவதால் அதில் உயிரோட்டம் அதிகரிக்கும். அனைவரது வீட்டிலும் வெட்டிவேர் இருந்தால் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ஒருவருக்கு கடன் கொடுக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்! பணம் திரும்ப கிடைக்காது!!